google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: நல்வழி

Wednesday, July 28, 2010

நல்வழி

கடவுள் வாழ்த்து 

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை 
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய் 
துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு 
சங்கத் தமிழ் மூன்றும் தா 




புண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள் செய்தஅவை 
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால் 
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தோர் சொல்லும் 
தீதொழிய நன்மை செயல்.


சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் 
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில் 
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார் 
பட்டாங்கில் உள்ள படி.



இடும்பைக்(கு) இடும்பை இயலுடம்(பு) இதன்றே 
இடும்பொய்யை மெய்யென்(று) இராதே - இடுங்கடுக 
உண்டாயின் உண்டாகும் ஊழில் பெருவலிநோய் 
விண்டாரைக் கொண்டாடும் வீடு.



எண்ணி ஒருகருமம் யார்க்கும்செய் ஒண்ணாது 
புண்ணியம் வந்தெய்து போதல்லால் - கண்ணில்லான் 
மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே 
ஆங்காலம் ஆகும் அவர்க்கு.



வருந்தி அழைத்தாலும் வாராத வாரா 
பொருந்துவன போமி(ன்) என்றால் போகா - இருந்தேங்கி 
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து 
துஞ்சுவதே மாந்தர் தொழில்.



உள்ளது ஒழிய ஒருவர்க்(கு) ஒருவர்சுகம் 
கொள்ளக் கிடையா குவலயத்தில் -வெள்ளக் 
கடலோடி மீண்டும் கரையேறினால் என் 
உடலோடு வாழும் உயிர்க்கு.



எல்லாப்படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு 
பொல்லாப் புழுமலிநோய் புன்குரம்பை -நல்லார் 
அறிந்திருப்பார் ஆதலினால் ஆம்கமல நீர்போல் 
பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு.



ஈட்டும் பொருள்முயற்சி எண்ணிறந்த ஆயினும்ஊழ் 
கூட்டும் படியன்றிக் கூடாவாம் - தேட்டம் 
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின் 
தரியாது காணும் தனம்.



ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வா(று) 
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு 
நல்ல குடிபிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும் 
இல்லை என மாட்டார் இசைந்து .



ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் 
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா! 
நமக்கும் அதுவழியே! நாம்போம் அளவும் 
எமக்கென்? என்(று) இட்டு, உண்டு, இரும்



ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய் 
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும் 
என்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே 
உன்னோடு வாழ்தல் அறிது.



ஆற்றங் கரையின் மரமும் அரசறிய 
வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே - ஏற்றம் 
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர் 
பழுதுண்டு வேறோர் பணிக்கு,



ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச் 
சாவாரை யாரே தவிர்ப்பவர்- ஓவாமல் 
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார் 
மெய்அம் புவியதன் மேல்.



பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால் 
இச்சைபல சொல்லி இடித்துண்கை - சிச்சீ 
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது 
உயிர்விடுகை சால உறும்.



சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு 
அபாயம் ஒருநாளும் இல்லை - உபாயம் 
இதுவே(;) மதியாகும் அல்லாத எல்லாம் 
விதியே மதியாய் விடும்.



தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம்கொடையால் 
கண்ணீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை 
கற்பழியா ஆற்றல் கடல்சூழ்ந்த வையகத்துள் 
அற்புதமாம் என்றே அறி.



செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால் 
எய்த வருமோ இருநிதியம்?- வையத்து 
"
அறும்-பாவம்!" என்ன அறிந்து அன்றிடார்க்கு இன்று 
வெறும்பானை பொங்குமோ மேல்?



பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில் 
உற்றார் உகந்தார் எனவேண்டார் - மற்றோர் 
இரணம் கொடுத்தால் இடுவர்(;) இடாரே 
சரணம் கொடுத்தாலும் தாம்.



சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும் 
பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் - போவிப்பம் 
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால் 
நாழி அரிசிக்கே நாம்.



அம்மி துணையாக ஆறிழிந்த வாறொக்கும் 
கொம்மை முலைபகர்வார் கொண்டாட்டம் -இம்மை 
மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி 
வெறுமைக்கு வித்தாய் விடும்.



நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும் 
பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும் 
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க் கென்றும் 
தரும்சிவந்த தாமரையாள் தான்.



பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக் 
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டுங்(கு) 
ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார் 
பாவிகாள் அந்தப் பணம்.



வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே 
பாதாள மூலி படருமே - மூதேவி 
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே 
மன்றோரம் சொன்னார் மனை.



நீறில்லா நெற்றிபாழ்(;) நெய்யில்லா உண்டிபாழ் 
ஆறில்லா ஊருக் (கு) அழகுபாழ் - மாறில் 
உடன்பிறப் பில்லா உடம்புபாழ் (;) பாழே 
மடக்கொடி இல்லா மனை.



ஆன முதலில் அதிகம் செலவானால் 
மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை 
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய் 
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.



மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை 
தானம் தவர்உயர்ச்சி தாளாண்மை - தேனின் 
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும் 
பசிவந்திடப் பறந்து போம்.



ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும் 
அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை 
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும் 
எனையாளும் ஈசன் செயல்.



உண்பது நாழி உடுப்பது நான்குமுழம் 
எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண்புதைந்த 
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச் 
சாந்துணையும் சஞ்சலமே தான்.



மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி 
இரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்தமுதம் 
கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல் 
உற்றார் உலகத் தவர்.



தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார் 
பூந்தா மரை யோன் பொறிவழியே - வேந்தே 
ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா 
வெறுத்தாலும் போமோ விதி .



இழுக்குடைய பாட்டிற்(கு) இசைநன்று(;) சாலும் 
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய 
வீரத்தின் நன்று விடாநோய்(;) பழிக்கஞ்சாத் 
தாரத்தின் நன்று தனி.



ஆறிடும் மேடும் மடுவும்போ லாம்செல்வம் 
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடும் 
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக 
உண்ணீர்மை வீறும் உயர்ந்து.



வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம்(;) வேழத்தில் 
பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப் 
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின் 
வேருக்கு நெக்கு விடும்.



கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின் 
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - இல்லானை 
இல்லாளும் வேண்டாள்(;) மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள் 
செல்லா(து) அவன்வாயிற் சொல்.



பூவாதே காய்க்கும் மரமுள மக்களுளும் 
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே - தூவா 
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு 
உரைத்தாலும் தோன்றா(து) உணர்வு.



நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில் 
கொண்ட கருவளிக்கும் கொள்கைபோல் - ஒண்தொடீ 
போதம் தனம்கல்வி பொன்றவரும் காலமயல் 
மாதர்மேல் வைப்பார் மனம்.



வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம் 
அனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக் 
கண்ணுறுவ தல்லால் கவலைப் படேல் நெஞ்சே 
விண்ணுறுவார்க் கில்லை விதி.



நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும் 
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை 
தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப் 
போனவா தேடும் பொருள்.



முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத் 
தப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்பும் 
கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள் 
முலையளவே ஆகுமாம் மூப்பு.



தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் 
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை 
திருவா சகமும் திருமூலர் சொல்லும் 
ஒருவா சகமென் றுணர்.








No comments: