google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: Lord Murugan devotional songs
Showing posts with label Lord Murugan devotional songs. Show all posts
Showing posts with label Lord Murugan devotional songs. Show all posts

Saturday, March 27, 2010

முருக பக்திப் பாடல்கள்

முருகன் துணை

கந்தன் திருநீறணிந்தால்


கந்தன் திருநீறணிந்தால்
கண்டபிணி ஓடிவிடும்
குந்தகங்கள் மாறி இன்பம்
குடும்பத்தை நாடி வரும்
(
கந்தன்)
சுந்தரவேல் அபிஷேக
சுத்தத் திருநீறணிந்தால்
வந்தமர்ந்த மூத்தவளும்
வழிபார்த்துப் போய்விடுவாள்

அந்த நேரம் பார்த்திருந்து
அன்னைசெல்வம் ஓடிவந்து
சிந்தையைக் குளிரவைத்து
சொந்தம் கொண்டாடிடுவாள்
(
கந்தன்)
மணம் மிகுந்த சாம்பலிலே
மகிமை இருக்குதடா
மனமுடன் அணிவோர்க்கு
மகிழ்ச்சியைப் பெருக்குதடா

தினம்தினம் நெற்றியிலே
திருநீறு அணிந்திடடா
தீர்ந்திடும் துன்பம் எல்லாம்
தெய்வம் துணை தாருமடா
(
கந்தன்)
_____________________________________________________________

உள்ளம் உருகுதய்யா

உள்ளம் உருகுதய்யா முருகா
உன்னடி காண்கையிலே
அள்ளி அணைதிடவே
எனக்குள் ஆசை பெருகுதய்யா முருகா
(
உள்ளம்)

பாடிப் பரவசமாய் உனையே
பார்த்திடத் தோணுதய்யா
ஆடும் மயிலேறி முருகா
ஓடி வருவாயப்பா
(
உள்ளம்)
பாசம் அகன்றதய்யா
என் நெஞ்சில் நேசம் வளர்ந்ததய்யா
ஈசன் திருமகனே
எந்தன் ஈனம் மறைந்ததய்யா
(
உள்ளம்)
ஆறு திருமுகமும்
உன்னருளை வாரி வழங்குதய்யா
வீரமிகு தோளும்
கடம்பும் வெற்றி முழக்குதப்பா
(
உள்ளம்)
கண்கண்ட தெய்வமய்யா
நீயிந்தக் கலியுக வரதனய்யா
பாவியென்றிகழாமல்
எனக்குன் பதமலர் தருவாயப்பா
(
உள்ளம்)
______________________________


கற்பனை என்றாலும்


கற்பனை என்றாலும்
கற்சிலை என்றாலும்
கந்தனே உனை மறவேன் - நீ
(
கற்பனை)

அற்புதமாகிய அருட்பெரும் சுடரே
அருமறை தேடிடும் கருணையக் கடலே - நீ
(
கற்பனை)

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே
(
கற்பனை)
____________________________

அழகென்ற சொல்லுக்கு

முருகா... முருகா...

அழகென்ற சொல்லுக்கு முருகா - உந்தன்
அருளன்றி உலகிலே பொருளேது முருகா (அழகென்ற)

சுடராக வந்த வேல் முருகா - கொடுஞ்
சூரரைப் போரிலே வென்ற வேல் முருகா
கனிக்காக மனம் நொந்த முருகா - முக்
கனியான தமிழ் தந்த செல்வமே முருகா (அழகென்ற)

ஆண்டியாய் நின்ற வேல் முருகா - உன்னை
அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா
பழம் நீ அப்பனே முருகா - ஞானப்
பழம் உன்னை அல்லாது பழம் ஏது முருகா (அழகென்ற)

குன்றாறும் குடி கொண்ட முருகா - பக்தர்
குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா
சக்தி உமை பாலனே முருகா - மனித
சக்திக்கே எட்டாத தத்துவமே முருகா (அழகென்ற)

பிரணவப் பொருள் கண்ட திரு முருகா - பரம்
பொருளுக்கு குருவான தேசிகா முருகா
ஹரஹரா ஷண்முகா முருகா - என்று
பாடுவோர் எண்ணத்தில் ஆடுவாய் முருகா (அழகென்ற)

அன்பிற்கு எல்லையோ முருகா - உந்தன்
அருளுக்கு எல்லை தான் இல்லையே முருகா
கண்கண்ட தெய்வமே முருகா - எந்தன்
கலியுக வரதனே அருள் தாரும் முருகா (அழகென்ற)

__________________________________________

ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் னணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்கசீ ரடிய ரெல்லாம்.

________________________________________________