google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: Thaayai kaaththa thanayan
Showing posts with label Thaayai kaaththa thanayan. Show all posts
Showing posts with label Thaayai kaaththa thanayan. Show all posts

Tuesday, April 6, 2010

தாயைக் காத்த தனயன் எம் ஜி ஆர் பாடல்

கட்டித் தங்கம் வெட்டி எடுத்து

காதல் என்னும் சாறு பிழிந்து

தட்டிதட்டிச் சிற்பிகள் செய்த உருவமடா! - அவள்

தளதளவென்று ததும்பி நிற்கும் பருவமடா!


(கட்டி)



தொட்டுத் தொட்டு நின்றன கைகள்

சுட்டுச் சுட்டு கொன்றன கண்கள்! - நான்

கிட்டக் கிட்ட வந்தது கண்டு

எட்டி எட்டிச் சென்றது வண்டு...!


(கட்டி)



தங்கரதம் போல் வருகிறாள் - அல்லித்

தண்டுகள் போலே வளைகிறாள்!

குங்குமப் பூப்போல் சிரிக்கிறாள் - இன்பக்

கோட்டைக்கு என்னை அழைக்கிறாள்.

காலையில் மலரும் தாமரைப்பூ! -அந்திக்

கருக்கலில் மலரும் மல்லிகைப்பூ!

இரவில் மலரும் அல்லிப்பூ!...அவள்

என்றும் மணக்கும் முல்லைப்பூ!


(கட்டி)