google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: Sendru Vaa Maganae Sendru Vaa
Showing posts with label Sendru Vaa Maganae Sendru Vaa. Show all posts
Showing posts with label Sendru Vaa Maganae Sendru Vaa. Show all posts

Thursday, March 9, 2017

Go My Son Go



Song: sendru vaa magane
Movie: Mahakavi Kalidas Singers: K.B. Sundarambal
Lyrics: Poet Kannadasan
Music: K.V. Mahadevan
Year: 1966

sendru vaa makanE sendru vaa - aRivai
vendru vaa makanE vendru vaa
kandru thaayai vittu sendra pinnum
kandru thaayai vittu sendra pinnum - adhu
nindra poomi thannai maRappadhillai
sendru vaa makanE sendru vaa - aRivai
vendru vaa makanE vendru vaa
aRivulakam unnai azhaikkindradhu - Edhum
aRiyaadhavan endrE ninaikkindradhu
araNmanai vaasal thiRakkindradhu
araNmanai vaasal thiRakkindradhu - angE
aaNavam punnakai purikindradhu
sendru vaa makanE sendru vaa - aRivai
vendru vaa makanE vendru vaa
uNmaiyaich cholvadhaRku patippedhaRku? - ellaam
uNarndhavar pOl natikkum natippedhaRku?
kaN kaNta kaatchikatku viLakkedhaRku? - nenjil
kaLLamillaadhavarkku payamedhaRku?
nee irukkum itaththil naaniruppEn - un
nizhalilum poruLaakak kutiyiruppEn
thaayirukkum varaiyil kalakkamillai - indhath
thaayirukkum varaiyil kalakkamillai - endhach
chapaiyilum unakku natukkamillai
sendru vaa makanE sendru vaa aRivai
vendru vaa makanE vendru vaa
 பாடல்: சென்று வா மகனே சென்று வா
திரைப்படம்: மஹாகவி காளிதாஸ் 
பாடியவர்: கே.பி. சுந்தராம்பாள்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1966

சென்று வா மகனே சென்று வா - அறிவை
வென்று வா மகனே வென்று வா
கன்று தாயை விட்டு சென்ற பின்னும்
கன்று தாயை விட்டு சென்ற பின்னும் - அது
நின்ற பூமி தன்னை மறப்பதில்லை
சென்று வா மகனே சென்று வா - அறிவை
வென்று வா மகனே வென்று வா
அறிவுலகம் உன்னை அழைக்கின்றது - ஏதும்
அறியாதவன் என்றே நினைக்கின்றது
அரண்மனை வாசல் திறக்கின்றது
அரண்மனை வாசல் திறக்கின்றது - அங்கே
ஆணவம் புன்னகை புரிகின்றது
சென்று வா மகனே சென்று வா - அறிவை
வென்று வா மகனே வென்று வா
உண்மையைச் சொல்வதற்கு படிப்பெதற்கு? - எல்லாம்
உணர்ந்தவர் போல் நடிக்கும் நடிப்பெதற்கு?
கண் கண்ட காட்சிகட்கு விளக்கெதற்கு? - நெஞ்சில்
கள்ளமில்லாதவர்க்கு பயமெதற்கு?
நீ இருக்கும் இடத்தில் நானிருப்பேன் - உன்
நிழலிலும் பொருளாகக் குடியிருப்பேன்
தாயிருக்கும் வரையில் கலக்கமில்லை - இந்தத்
தாயிருக்கும் வரையில் கலக்கமில்லை - எந்தச்
சபையிலும் உனக்கு நடுக்கமில்லை
சென்று வா மகனே சென்று வா அறிவை
வென்று வா மகனே வென்று வா