google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: September 2009

Tuesday, September 29, 2009

அன்பு ஒலி Anbhu Oulee

அன்பு ஒலி (Anbhu Oulee) என்று ஒரு அருமையான மாத இதழ் மே 2009 முதல் தமிழில் வந்து கொண்டு இருக்கிறது.

Social development, general public awareness, useful discussions, future planning, business, personality development, entrepreneur, small scale industries, agriculture & farming, job, travel, comments, the other side of day to day activities, authority, past and present, short stories, trend, mental ability, belief, astrology, horoscope, medicine, self confidence, custom, etiquette, manners, tradition, behaviour, habits, college dreams, literature, games & sports என்று எல்லா அம்சங்களையும் தன்னகத்தே கொண்டு சிறப்பாக இருக்கிறது.

மேலும் இதுபற்றி அறிய http://anbhuoulee.com அல்லது http://www.anbhuoulee.com செல்க.

Thursday, September 24, 2009

Life saving earth / ground connection

Life saving earth / ground connection

எர்த் இணைப்பு உயிரைக் காக்கும்

நாம் அனைவரும் வழக்கமாகப் பயன்படுத்துவது மின்சாரம். நம் எண்ணங்களுக்கு ஏற்ப அதைப் பல வகைகளிலும் பயன்படுத்துகிறோம்.இத்தகைய மின்சாரமானது, பல இடங்களில் உலோகத்தாலான பொருள்களின் மேல் (பாடி) பாய்ந்து விடும் அபாயம் உள்ளது. மெயின் சுவிட்சு, அயர்ன் பாக்ஸ், கிரைண்டர் போன்றவற்றில் மின்கசிவு ஏற்படும் போது, நாம் அந்த சாதனங்களைத் தொட்டால் 'ஷாக்' அடித்துவிடும். ஒரு சில நிமிடங்களில் உயிர் போய் விடலாம். மின்சாரத்தில் கை பட்டவுடன் உடலில் பாய்ந்து, கால் வழியாகப் பூமிக்குப் பாய்கிறது. இதனால் இரத்தம் உறைந்து உயிருக்கே ஆபத்தாக முடியலாம். தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை எப்போதும் தேவை.

இப்படிப்பட்ட ஆபத்தைத் தவிர்க்கவே, மின் சாதனங்களில் 'எர்த் இணைப்பு' கொடுக்கப் படுகிறது. நாம் அதை முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அலட்சியப் படுத்தக் கூடாது.


தரையில் சுமார் ஒரு சதுர அடிப் பரப்பில் சுமார் ஆறு அடி குழி தோண்டி, இரும்புக் குழாயை இறக்கி இறுக்கி, கரி, உப்பு, மண் போட்டு மூடி, இரும்புக் குழாயின் மேற்பகுதியில் துளையிட்டு வீட்டில் அல்லது கட்டடத்தில் இருந்து வரும் 'எர்த் வயரை' 'நட்' ஐயும் 'போல்ட்' ஐயும் கொண்டு 'டைட்' ஆக இணைப்பார்கள். தண்ணீரையும் ஊற்றி ஈரம் ஆக்கி விடுவார்கள். இப்படிச் செய்தால், எதிர்பாராத வகையில் ஏற்படும் மின்கசிவால் நமக்கு ஷாக் அடிக்காது. அந்த மின்சாரம் உடனடியாக பூமிக்குக் கடத்தப்படும். நம் உயிரும் காப்பாற்றப்படும்.

Wednesday, September 16, 2009

Semen strength and sperm count

Tips to increase semen strength and sperm count
தாது பலம் பெறஆண்மை பெருகதாது விருத்தியாக


தாது பலப்பட:
பத்து கிராம் வில்வ வேர் பட்டையை ஒரு கிராம் சீரகத்துடன் அரைத்துபாலில் தொடர்ந்து சாப்பிடவும்.
முருங்கை  பிசினை பொடி செய்து அரை கரண்டி பாலில் காலைமாலை சாப்பிடவும்.

ஆண்மை பெருக:
திப்பிலி பொடியை நெய்யுடன் சாப்பிடவும்.
பேரீச்சம் பழத்தை ஆட்டுப்பாலில் ஊறவைத்து மறுநாள் காலையில் ஏலக்காய் சேர்த்து சாப்பிடவும்.

தாது விருத்தியாக:
முருங்கை  இலை பொரியல் செய்து நெய் சேர்த்து நாற்பத்து எட்டு நாட்கள் சாப்பிடவும்.
வாழைப்பூவை பருப்புடன் சமைத்து சாப்பிடவும்.
பலாக்கொட்டையை அவித்து, காயவைத்து, தூளாக்கி, கருப்பட்டி அல்லது கற்கண்டு சேர்த்து சாப்பிடவும்.
அதிமதுரத்தை பொடி செய்து பாலில் சேர்த்துக் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்து குடித்து வந்தால், தாது விருத்தி உண்டாகும். போக சக்தி அதிகரிக்கும்.
தாது இழப்பு தீர:
சாதிக்காய் பொடி,  பிரண்டை, உப்பு நெய்யில் சேர்த்து சாப்பிடவும்.

வெங்காயம் பாலுணர்வைத் தூண்டும். 
கருவேல மரத்துப் பிசினை சுத்தம் செய்து பொடியாக்கி  நெய்யில் பொரித்து சாப்பிட்டால் விந்து இறுகும்.
அசுவகந்தா லேகியம்  ஆண்மைக் கோளாறுகளை சரி செய்யும்.

அமுக்கிராகிழங்கை பாலில் வேகவைத்து, பின்பு அதை எடுத்து அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்து இடித்து சூரணமாக்கி   தேன் கலந்து உண்டால் ஆண்களுக்கு ஆண்மை கூடும்.


வலுவான ஆண்மைக்கு 
அரசம்பழத்தை பாலில் காய்ச்சி வெல்லத்துடன் ஒவ்வொருநாளும் குடித்தால் ஆண்மை வலுவடையும். ஆண்குறியின் தளர்ச்சி நீங்கும்.
ஓரிலைத்தாமரையை அரைத்து பாலில்கலந்து குடித்தாலும் தளர்ச்சி நீங்கும்.
செம்பருத்திப்பூவை உலர்த்தி இடித்து நீரில் கொதிக்கவைத்து சர்க்கரைசேர்த்து குடித்தால் பலம் கிடைக்கும்.
பேரீச்சம்பழம், உளுந்து இவைகளை தேனுடன்சேர்த்துஅருந்தினால் தளர்வு நீங்கும்.
இலுப்பைப்பூகஷாயத்துடன் பசும்பால் சேர்த்து குடித்து வந்தால்  ஆண்மை வலுப்பெறும்.

Wednesday, September 2, 2009

Fairness treatment at home

முகம் சிகப்பான அழகு பெற, சிவப்பழகு பெற எளிய வீட்டுக் குறிப்புகள்

  • பப்பாளிக் காயின் பாலை முகப்பருவில் தடவினால் பருக்கள் மறைந்து விடும்.
  • வெள்ளரிச் சாறு, பன்னீர், எலுமிச்சைச் சாறு இவை மூன்றையும் சம அளவு கலந்து முகத்தில் தடவிச் சற்று சென்றதும் கழுவி விடவும். தொடர்ந்து இவ்வாறு செய்தால் முகப்பரு மறைந்து முகம் பொலிவான தோற்றத்தை அடையும்.
  • வெள்ளரி வில்லைகளை பிரிட்ஜில் இருந்து எடுத்து நன்கு கழுவப்பட்ட முகத்தில், மூடிய கண்களின் மீது வைத்து ஓய்வு எடுக்கவும். பின்னர் கரு வளையம் கரும் புள்ளிகள் மீது தேய்த்து, முகத்தைத் தண்ணீரில் கழுவவும்.
  • வெள்ளரிச் சாற்றையும் உருளைக்கிழங்குச் சாற்றையும் கலந்து பஞ்சினால் கரு வளையம் கரும் புள்ளிகள் மீது தேய்த்து, இருபது நிமிடங்கள் கழித்து முகத்தைத் தண்ணீரில் கழுவவும்.
  • வெள்ளரியுடன் எலுமிச்சை சாறு சேர்த்து பசை போல் செய்து முகத்தில் தடவிக் காயவிட்டு, கழுவினால், தழும்புகள் மறையும்.
  • ஒரு தேக்கரண்டி உளுந்தையும் நான்கு அல்லது ஐந்து பாதாம் பருப்புகளையும் ஊற வைத்து அரைக்கவும். இதை முகத்தில் தடவி, சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு கழுவவும். முகம் பொலிவடையும்.
  • பாலில் உப்பையும் எலுமிச்சைச் சாற்றையும் கலந்து முகத்தில் பூசி, சிறிது நேரம் சென்றபின் முகம் கழுவினால் தோலில் உள்ள துவாரங்கள் திறக்கும். அதனால் தோல் (சருமம்) சுத்தமாகும்.
  • முகம் அழகாக முகத்தில் என்ன தடவினாலும் கழுத்துக்கும் சேர்த்தே தடவவும். அப்போது தான் நிறம் வித்தியாசப் படாது.
  • முல்தானி மிட்டி என்பது ஒரு வகையான மண். 'Fuller's earth' என்று இதற்குப் பெயர். பருவைப் போக்கவும், கண்ணைச் சுற்றியுள்ள கருவளையங்களைப் போக்கவும் இதை பேக் போடலாம். பன்னீருடன் சேர்த்துப் போட்டால் சிறப்பாக இருக்கும். எண்ணெய் உறிஞ்சும் தன்மை கொண்டதால், எண்ணெய்ப் பிசுக்கு முகத்தையும் நல்லபடியாக மாற்றிவிடும்.
  • அரிசி மாவுடன் எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்து முகத்தில் தடவி சிறிது நேரம் சென்றதும் தேய்த்துக் கழுவவும். பருக்கள் மறையும். பருவினால் வந்த வடு மறையும். முகம் பளபளப்பாகும்.
  • அரிசி மாவுடன் ஆரஞ்சு சாறு கலந்தும் தடவலாம்.
  • தக்காளிச் சாற்றுடன் சில துளிகள் எலுமிச்சைச் சாரு விட்டு முகத்தில் தடவி சிறிது நேரம் சென்றதும் கழுவி விட்டால் முகம் பளபளப்பாகும்.
  • கடலை மாவுடன் தயிர் சேர்த்து முகத்தில் தடவி சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு கழுவினால் முகம் பொலிவடையும்.
  • மஞ்சள், கோதுமை மாவு, நல்லெண்ணெய் மூன்றையும் சம அளவு கலந்து முகத்தில் தடவினால் தேவையற்ற முடிகள் (ரோமங்கள்) உதிர்ந்து விடும்.
  • வாழைப்பழத்தையும் தேனையும் நன்கு குழைத்து முகத்தில் தடவி சுமார் கால் மணி நேரம் ஊற வைத்தால் வறண்ட தோல் மிருதுவாகும்.
  • முட்டைக்கோஸ் சாறு , தேன், எலுமிச்சைச் சாறு இம்மூன்றையும் கலந்து கழுத்தில் தேய்த்தால் கருமை நிறம் மாறும்.
  • பப்பாளிப்பழத்தின் சதையை வாரம் இருமுறை முகத்தில் தடவினால் முகம் பிரகாசம் அடையும். கரும்புள்ளி, வெண்புள்ளி, பருக்கள், வடுக்கள் மறையும்.
  • கடுமையான வெயில், கடும் குளிர் காலங்களில் வெளியில் அதிகம் செல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
  • தினமும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்கவும்.
  • புதிய காய்கறிகள் பழங்கள் சாப்பிடவும்.
  • நீராவிக் குளியல் சருமத்தில் உள்ள துளைகளைத் திறந்து இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும்.