google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: தாயைக் காத்த தனயன் எம் ஜி ஆர் பாடல்

Tuesday, April 6, 2010

தாயைக் காத்த தனயன் எம் ஜி ஆர் பாடல்

கட்டித் தங்கம் வெட்டி எடுத்து

காதல் என்னும் சாறு பிழிந்து

தட்டிதட்டிச் சிற்பிகள் செய்த உருவமடா! - அவள்

தளதளவென்று ததும்பி நிற்கும் பருவமடா!


(கட்டி)



தொட்டுத் தொட்டு நின்றன கைகள்

சுட்டுச் சுட்டு கொன்றன கண்கள்! - நான்

கிட்டக் கிட்ட வந்தது கண்டு

எட்டி எட்டிச் சென்றது வண்டு...!


(கட்டி)



தங்கரதம் போல் வருகிறாள் - அல்லித்

தண்டுகள் போலே வளைகிறாள்!

குங்குமப் பூப்போல் சிரிக்கிறாள் - இன்பக்

கோட்டைக்கு என்னை அழைக்கிறாள்.

காலையில் மலரும் தாமரைப்பூ! -அந்திக்

கருக்கலில் மலரும் மல்லிகைப்பூ!

இரவில் மலரும் அல்லிப்பூ!...அவள்

என்றும் மணக்கும் முல்லைப்பூ!


(கட்டி)

No comments: