google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: வீட்டுக் காய்கறித் தோட்டம்

Monday, March 22, 2010

வீட்டுக் காய்கறித் தோட்டம்

  • காய்கறிகள் நமது அன்றாட வாழ்விற்கு மிகவும் முக்கியமான வையாகும்.
  • இவை உணவின் ஊட்டச்சத்தை அதிகரிப்பதோடு, உணவை ருசியாக்குகின்றன.
  • ஊட்டச்சத்து வல்லுனர்களின் பரிந்துரைப்படி, ஒரு வயது வந்த நபர், சீரான திட்ட உணவிற்கு ஒரு நாளைக்கு 85 கிராம் பழங்களையும் 300 கிராம் காய்கறிகளையும் உண்ண வேண்டும்.
  • நாம் நமது அன்றாட வாழ்விற்கு தேவையான காய்கறிகளை வீட்டுக் காய்கறி தோட்டத்தில், நம்மிடம் உள்ள சுத்தமான தண்ணீர், சமயலறை மற்றும் குளியலறை கழிவு நீரை பயன்படுத்தி உற்பத்தி செய்யலாம்.
  • மிகக் குறைவான இடத்தில் சாகுபடி செய்யப்படுவதால், மிக எளிதான முறையில் நோய் மற்றும் பூச்சி கட்டுப்பாட்டை மேற்கொள்ள முடிகிறது.
  • மேலும் பூச்சிகொல்லி மருந்துகள் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.
  • நோய் மற்றும் பூச்சி தாக்கிய பகுதிகளை செடிகளில் இருந்து அகற்றினால் போதுமானதாகும்.
  • இதனால் காய்கறிகளில் நச்சு இரசாயனங்கள் படிவதை தவிர்க்க முடிகிறது.


தோட்டத்திற்கான இடம் தேர்வு செய்தல்:

  • வீட்டின் பின்புறத்தில் அல்லது முன்புறத்தில் இருக்கும் காலி இடத்தை தேர்வு செய்யலாம்.
  • காலியாக இருக்கும் இடத்தைப் பொறுத்தும், எத்தனை நபருக்கு காய்கறி தேவைப்படும் என்பதை பொறுத்தும் தோட்டத்தின் அளவை நிர்ணயம் செய்ய வேண்டும்.
  • தோட்டத்தை எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம். ஆனால் முடிந்தவரை சதுரவடிவத்தைவிட செவ்வக வடிவ வீட்டுக்காய்கறி தோட்டத்தை தேர்வு செய்யலாம்.
  • ஊடுபயிர் சாகுபடி மற்றும் தொடர் சாகுபடி முறையை மேற்கொள்ள வேண்டும்.


நிலம் தயார் செய்தல்:

  • நிலத்தை 30-40 செமீ ஆழத்திற்கு மண்வெட்டி கொண்டு கிளறிவிட வேண்டும்.
  • கற்கள், புதர்கள், களைகள் ஆகியவற்றை அகற்ற வேண்டும்.
  • 100 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு எருவை இட்டு நன்கு கலக்கி விட வேண்டும்.
  • தேவைக்கேற்ப 45 செமீ - 60 செமீ என்ற இடைவெளியில் பார்சால் அமைக்க வேண்டும்.
  • தேவைப்பட்டால் படுக்கை முறையிலும் சாகுபடி செய்யலாம்.


விதைத்தல் மற்றும் நடவு செய்தல்:


  • நேரடி விதைப்பு பயிர்களான வெண்டை, கொத்தவரை மற்றும் தட்டைப்பயறு போன்றவற்றை பாரின் ஒரு புறத்தில் 30 செமீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
  • முழு செடியாக பிடுங்கப்படும் அல்லது அறுவடை செய்யப்படும் தண்டுக்கீரை, சிறுகீரை ஆகியவற்றை, 1 பகுதி விதை 20 பகுதி மணல் என்ற விகிதத்தில் கலந்து கை விதைப்பு செய்யவேண்டும்.
  • சின்ன வெங்காயம், புதினா, கொத்தமல்லி போன்றவற்றை வரப்பின் ஓரத்தில் நட வேண்டும்.
  • நாற்று நடவு செய்யும் பயிர்களான தக்காளி, கத்தரி, மிளகாய் போன்றவற்றை நாற்றங்கால் படுக்கைகளில் அல்லது தொட்டிகளில் ஒரு மாதத்திற்கு முன்பே விதைக்க வேண்டும்.
  • விதைப்பு முடிந்து மண்ணை மூடியவுடன், எறும்பு வருவதை தடுக்க 250 கிராம் வேப்பம்புண்ணாக்கை தூவவேண்டும்.
  • விதைத்து 30 நாட்கள் கழித்து தக்காளியையும், 40-45 நாட்கள் கழித்து கத்தரி, மிளகாய், சிறு வெங்காயம் ஆகியவற்றையும் நாற்றங்களில் இருந்து எடுத்து நடவு செய்ய வேண்டும்.
  • தக்காளி, கத்தரி, மிளகாய் ஆகியவற்றிற்கு 30-45 செமீ என்ற இடைவெளியில் பாரின் ஒரு பக்கத்திலும், சின்ன வெங்காயத்திற்கு 10 செமீ இடைவெளியில் பாரின் இரு பக்கமும் நட வேண்டும்.
  • நடவு செய்தவுடன் முதல் தண்ணீரும் நட்ட மூன்றாம் நாள் மறுதண்ணீரும் பாய்ச்ச வேண்டும்.
  • நாற்றுகளுக்கு இளம் பருவங்களில் இரு நாட்களுக்கு ஒரு முறையும், பிற்பருவங்களில் நான்கு நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்ச வேண்டும்.
  • ஒரு வருடத்திற்கு, வீட்டுச்செலவுக்கு தேவைப்படும் காய்கறிகளை தொடர்ச்சியாக உற்பத்தி செய்வதே வீட்டு காய்கறி தோட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.
  • சில முக்கிய வழிமுறைகளை கையாண்டு இந்த நோக்கத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம்.
  • பல பருவ தாவரங்களை மற்ற பயிர்களில் நிழல் படியாதவாறும், ஊட்டச்சத்திற்கு போட்டி ஏற்படாதவாறும் தோட்டத்தின் மூலையில் நடவேண்டும்.
  • தோட்டத்தின் நடுவில் உள்ள நடைபாதை மற்றும் ஏனைய நடைபாதையின் அருகிலும் குறுகிய கால பயிர்களான கொத்தமல்லி, புதினா, பொன்னாங்கன்னி, பாலக் போன்றவற்றை நட வேண்டும்.
  • ஊடுபயிராக தண்டுகீரை, சிறுகீரை பயிர் செய்யவும்.


பலவருட பயிர்கள்:

  • முருங்கை, வாழை, பப்பாளி, மரவள்ளிக் கிழங்கு, கறிவேப்பிலை, அகத்தி.

இந்திய சூழ்நிலைக்கு ஏற்ற ஒரு மாதிரி வீட்டுக் காய்கறி தோட்டத்திற்கான பயிரிடும் திட்டமுறை (மலைப் பகுதி தவிர):


  • தக்காளி மற்றும் வெங்காயம் -- ஜுன் - செப்டம்பர்
  • முள்ளங்கி -- அக்டோபர் - நவம்பர்
  • பீன்ஸ் -- டிசம்பர் - பிப்ரவரி
  • வெண்டைக்காய் -- மார்ச் - மே
  • கத்தரி -- ஜுன் - செப்டம்பர்
  • பீன்ஸ் -- அக்டோபர் - நவம்பர்
  • தக்காளி -- ஜுன் - செப்டம்பர்
  • தண்டுகீரை, சிறுகீரை -- மே
  • மிளகாய் மற்றும் முள்ளங்கி -- ஜுன் - செப்டம்பர்
  • தட்டப்பயறு / காராமணி -- டிசம்பர் - பிப்ரவரி
  • பெல்லாரி வெங்காயம் -- மார்ச் - மே
  • வெண்டைக்காய் மற்றும் முள்ளங்கி -- ஜுன் - ஆகஸ்டு
  • முட்டைக்கோஸ் -- செப்டம்பர் - டிசம்பர்
  • கொத்தவரை -- ஜனவரி - மார்ச்
  • பெரிய வெங்காயம் -- ஜுன் - ஆகஸ்டு
  • பீட்ருட் -- செப்டம்பர் - நவம்பர்
  • தக்காளி -- டிசம்பர் - மார்ச்
  • வெங்காயம் -- ஏப்ரல் - மே
  • கொத்தவரை -- ஜுன் - செப்டம்பர்
  • கத்தரி மற்றும் பீட்ருட் -- அக்டோபர் - ஜனவரி
  • பெரிய வெங்காயம் -- ஜுலை - ஆகஸ்டு
  • கேரட் -- செப்டம்பர் - டிசம்பர்
  • பூசணி -- ஜனவரி - மார்ச்
  • மொச்சை, அவரை -- ஜுன் - ஆகஸ்டு
  • வெங்காயம் -- ஜனவரி - ஆகஸ்டு
  • வெண்டைக்காய் -- செப்டம்பர் - டிசம்பர்
  • கொத்தமல்லி -- ஏப்ரல் - மே

காய்கறி தோட்டத்தின் பயன்கள்:

  • முதலில் தங்கள் குடும்பத்திற்கு தேவையான காய்கறிகளை பூர்த்தி செய்து கொண்டு, பின்னர் அளவுக்கு அதிகமாக உள்ளவற்றை விற்கவும் அல்லது பண்டம் மாற்றி கொள்ளவும் செய்யலாம்.
  • சில சமயங்களில், வருமானம் ஈட்டுவதே காய்கறி தோட்டத்தின் முதன்மையான நோக்கம் ஆகிவிடுகிறது.
  • எந்த சமயத்திலும் ஒரு நல்ல ஊட்டச்சத்தின் அவசியத்தை மனதில் கொள்ள வேண்டும். ஏனெனில் ஊட்டச்சத்தும், வருவாய் ஈட்டுவதும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையனவாகும்.


வீட்டு காய்கறி தோட்டத்தின் பொருளாதார ஆதாயங்களும் பயன்களும்:

  • காய்கறி மற்றும் வருமானம் ஆகிய இரண்டு ஆதாயங்களும் வீட்டு காய்கறி தோட்டத்தில் கிடைக்கின்றன.
  • வீட்டில் பராமரிக்கப்படும் கால்நடைக்கு தேவையான தீவனமும் மற்றும் ஏனைய வீட்டு உபயோகத்திற்கு தேவைப்படும் விறகு போன்ற மூலப்பொருட்களும் கிடைக்கின்றன.
  • வீட்டுக்காய்கறி தோட்டத்துடன் கூடவே கால்நடை வளர்ப்பு, பெண்கள் சுயவருமானம் பெறுவதற்கு மூலாதாரமாக அமைகின்றது.

No comments: