நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம்
முள்ளாய் மாறியது
கனிமொழிக்கென்மேல் என்னடி கோபம்
கனலாய் காய்கிறது
உந்தன் கண்களுக்கென்மேல் என்னடி கோபம்
கணையாய் பாய்கிறது
குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை
விரட்டுவதேனடியோ
உந்தன் கொடியிடை இன்று படை கொண்டு வந்து
கொல்வதும் ஏனடியோ
திருமண நாளில் மணவறை மீது
இருப்பவன் நான் தானே
என்னை ஒரு முறை பார்த்து ஓரக் கண்ணாலே
சிரிப்பவள் நீதானே
சித்திரை நிலவே அத்தையின் மகளே
சென்றதை மறந்துவிடு
உந்தன் பக்தியில் திளைக்கும் அத்தான் எனக்கு
பார்வையை திறந்து விடு
No comments:
Post a Comment
Tamil endraal athai thamizh endru Kollalaamaa? தமிழ் என்றால் அதைத் தமிழென்று கொள்ளலாமா?