நீயும் பொம்மை நானும் பொம்மை
நெனச்சு பார்த்தா எல்லாம் பொம்மை
தாயின் மடியில் பிள்ளையும் பொம்மை
தலைவன் முன்னே தொண்டனும் பொம்மை
கோவிலில் வாழும் தெய்வமும் பொம்மை அதைக்
கும்பிடும் மனிதர் யாவரும் பொம்மை
வல்லவன் கையில் நல்லவன் பொம்மை
உள்ளவன் முன் இல்லாதவன் பொம்மை
அல்லும் பகலும் உழைப்பவன் பொம்மை
அல்லல்பட்டு அலைபவன் பொம்மை
விதியின் பார்வையில் உயிர்கள் பொம்மை
வீசும் புயலில் உலகமே பொம்மை
சதியின் முன்னே தர்மமே பொம்மை
சாவின் பிடியில் வாழ்வும் பொம்மை (நீயும்)
அன்பின் அணைப்பில் அனைவரும் பொம்மை
ஆசை வார்த்தையில் அறிவும் பொம்மை
இன்பச் சோலையில் இயற்கை பொம்மை அந்த
இயற்கை அமைப்பில் எதுவுமே பொம்மை (நீயும்)
No comments:
Post a Comment
Tamil endraal athai thamizh endru Kollalaamaa? தமிழ் என்றால் அதைத் தமிழென்று கொள்ளலாமா?