google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: 2012

Wednesday, November 28, 2012

Nilavukku enmel

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
நெருப்பாய் எரிகிறது

இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம்
முள்ளாய் மாறியது

கனிமொழிக்கென்மேல் என்னடி கோபம்
கனலாய் காய்கிறது

உந்தன் கண்களுக்கென்மேல் என்னடி கோபம்
கணையாய் பாய்கிறது

குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை
விரட்டுவதேனடியோ

உந்தன் கொடியிடை இன்று படை கொண்டு வந்து
கொல்வதும் ஏனடியோ

திருமண நாளில் மணவறை மீது
இருப்பவன் நான் தானே
என்னை ஒரு முறை பார்த்து ஓரக் கண்ணாலே
சிரிப்பவள் நீதானே

சித்திரை நிலவே அத்தையின் மகளே
சென்றதை மறந்துவிடு

உந்தன் பக்தியில் திளைக்கும் அத்தான் எனக்கு
பார்வையை திறந்து விடு

Kaar endru per padaiththaai



கார் என்று பேர் படைத்தாய் ககனத்துரும்போது
நீர் என்று பேர் படைத்தாய் நெடுந்தரையில் வீழ்ந்ததன் பின்
வார் சடை மென்கூந்தல் பால் ஆய்சியர்கை வந்ததன் பின்
மோர் என்று பேர் படைத்தாய் முப்பேரும் பெற்றாயே

 காளமேகப் புலவர் ஒரு நாள்  மோர் விற்கும் பெண்ணிடம் இருந்து மோர் வாங்கி அருந்தினார். அந்த மோர் மிகவும் தண்ணீர் கலந்ததாக இருந்தது. அதையே சிலேடை என்னும் இரட்டுற மொழிதலில் நீரானது அந்தப் பெண்மணியின் கை பட்டு மோர்  ஆனதாகப்  பாடுவதுபோல் மேற்கண்ட பாடலில்  குறை கூறியுள்ளார்.

Thursday, November 22, 2012

Songs from Aalayamani

திரைப்படம்: ஆலயமணி


பொன்னை விரும்பும் பூமியிலே

என்னை விரும்பும் ஓருயிரே

புதையல் தேடி அலையும் உலகில்

இதயம் தேடும் என்னுயிரே

பொன்னை விரும்பும் பூமியிலே

என்னை விரும்பும் ஓருயிரே

புதையல் தேடி அலையும் உலகில்

இதயம் தேடும் என்னுயிரே

ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே

ஆலயமணியின் இன்னிசை நீயே

ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே

ஆலயமணியின் இன்னிசை நீயே

தாய்மை எனக்கே தந்தவள் நீயே

தங்க கோபுரம் போல வந்தாயே

புதிய உலகம் புதிய பாசம்

புதிய தீபம் கொண்டு வந்தாயே



பொன்னை விரும்பும் பூமியிலே

என்னை விரும்பும் ஓருயிரே

புதையல் தேடி அலையும் உலகில்

இதயம் தேடும் என்னுயிரே



பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்

பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்

பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்

பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்

அலையும் நெஞ்சை அவரிடம் சொ்னேன்

அழைத்து வந்தார் என்னிடம் உன்னை

இந்த மனமும் இந்த குணமும்

என்றும் வேண்டும் என்னுயிரே



பொன்னை விரும்பும் பூமியிலே

என்னை விரும்பும் ஓருயிரே

புதையல் தேடி அலையும் உலகில்

இதயம் தேடும் என்னுயிரே



ஆலமரத்தின் விழுதினைப் போலே

அணைத்து நிற்கும் உறவு தந்தாயே

ஆலமரத்தின் விழுதினைப் போலே

அணைத்து நிற்கும் உறவு தந்தாயே

வாழைக் கன்று அன்னையின் நிழலில்

வாழ்வது போலே வாழவைத்தாயே

உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு

உள்ளம் ஒன்றே என்னுயிரே



பொன்னை விரும்பும் பூமியிலே

என்னை விரும்பும் ஓருயிரே

புதையல் தேடி அலையும் உலகில்

இதயம் தேடும் என்னுயிரே
 ---------------------------------------------

சட்டி சுட்டதடா கை விட்டதடா


புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா

புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா

நாலும் நடந்து முடிந்த பின்னால்

நல்லது கெட்டது தெரிந்ததடா

சட்டி சுட்டதடா கை விட்டதடா

புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா


பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா

மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா

பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா

மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா

ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா

ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா

அமைதி தெய்வம் முழுமனதில் கோவில் கொண்டதடா



சட்டி சுட்டதடா கை விட்டதடா

புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா



ஆரவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா

ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடா

தருமதேவன் கோவிலிலே ஒளி துலங்குதடா

தருமதேவன் கோவிலிலே ஒளி துலங்குதடா மனம்

சாந்தி சாந்தி சாந்தி என்று ஓய்வு கொண்டதடா



சட்டி சுட்டதடா கை விட்டதடா

புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
--------------------------------   கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?

கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?

சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா?

சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா?

சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா?

சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா?

ஆஹாஹா.. ஆஹாஹா..

கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?

கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?

கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்

கல்லைக் கனி ஆக்கும் உன்தன் ஒரு வாசகம்

கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்

கல்லைக் கனி ஆக்கும் உன்தன் ஒரு வாசகம்

உண்டென்று சொல்வதுன்தன் கண்ணல்லவா

வண்ண கண்ணல்லவா

உண்டென்று சொல்வதுன்தன் கண்ணல்லவா

வண்ண கண்ணல்லவா

இல்லையென்று சொல்வதுன்தன் இடையல்லவா?

மின்னல் இடையல்லவா?

ஆஹாஹா.. ஆஹாஹாஹா ஆஹாஹாஹா ஆஹாஹாஹா



கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?

கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?



ஆ..ஆ ஆ ஆ.. ஆ..ஆ ஆ ஆ..



கம்பன் கண்ட சீதை உன்தன் தாயல்லவா?

காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா?

கம்பன் கண்ட சீதை உன்தன் தாயல்லவா?

காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா?

அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி

அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி

சென்ற பின்பு பாவலர்க்கு நீயே கதி என்றும் நீயே கதி ஆ..ஆ..



கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?

கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?

ஆ.. -----------------------------------   தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே

தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே

அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே

அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே - அந்த

தூக்கமும் அமைதியும் நானானால் - உன்னை

தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்

தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே

அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே



காலையில் நான் ஓர் கனவு கண்டேன் - அதை

கண்களில் இங்கே எடுத்து வந்தேன்

எடுத்ததில் ஏதும் குறைந்து விடாமல்

கொடுத்து விட்டேன் உன்தன் கண்களிலே

கண்களிலே கண்களிலே



தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே

அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே



மனமென்னும் மாளிகை திறந்திருக்க

மையிட்ட கண்கள் சிவந்திருக்க

இரு கரம் நீட்டி திரு முகம் காட்டி

தவழ்ந்து வந்தேன் நான் உன்னிடமே

தவழ்ந்து வந்தேன் நான் உன்னிடமே



தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே

அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே - அந்த

தூக்கமும் அமைதியும் நானானால் - உன்னை

தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்



ஆஹஹஹாஹஹா ஆஹஹஹா

அஹஹஹஹாஹா ஹாஹஹஹா

---------------------------------------------------------------   வானம்பாடி...

ஆஹாஹஹா...


கண்ணான கண்ணனுக்கு அவசரமா கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையா (2)

பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா அது பேசாமல் பேசுவது கேட்கலையா


(கண்ணான)


பொன்னான கண்மணிக்குப் புரியாதா கொஞ்சம் முன்னாலே வந்தாலே தெரியாதா (2)

கண்ணழகை நான் காணக் கூடாதா கல்யாணத் தேரோடக் கூடாதா


(பொன்னான)


உள்ளத்தில் வீடுகட்டி உள்ளே ஓர் தொட்டில்கட்டி

பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா (2)

ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரோ


(உள்ளத்தில்)


கன்னத்தில் முத்தமிட்டு கண்ணிரண்டில் கண்ணை வைத்து

சின்னப் பிள்ளை போலே நானும் வாலாட்டவா (2)

(கண்ணான)


மஞ்சத்தில் உன்னை வைத்து மல்லிகை முல்லை வைத்து

கொஞ்சுமொழி பேசி வந்து நானாடவா (2)

அந்தமலர் வாடுமென்று சொந்தமலர் வண்ணம் கண்டு

இந்தமலர் வேண்டுமென்று நான் பாடவா (2)


(கண்ணான)


"வானம்பாடி

நீ ஒரு விசித்திரமான பொண்ணு

நீ என்னைக் காதலிக்கிறியா இல்ல வௌளயாடறியா

எனக்கு ஒண்ணுமே புரியல"

----------------------------------- மானாட்டம் தங்க மயிலாட்டம்

பூவாட்டம் வண்ண தேராட்டம்

தாலாட்டும் மங்கை சதிராட்டம்… கண்டு

தேனோடும் எங்கும் நதியாட்டம்

மானாட்டம் தங்க மயிலாட்டம்

பூவாட்டம் வண்ண தேராட்டம்

தாலாட்டும் மங்கை சதிராட்டம்… கண்டு

தேனோடும் எங்கும் நதியாட்டம்



செண்டிருக்கும் அதில் வண்டிருக்கும் அதை

கண்டிருக்கும் கண்கள் வந்திருக்கும்

செண்டிருக்கும் அதில் வண்டிருக்கும் அதை

கண்டிருக்கும் கண்கள் வந்திருக்கும்

சொல்லிருக்கும் அதில் சுவையிருக்கும்

இன்ப துணை இருக்கும் நெஞ்சில் உறவிருக்கும்

மானாட்டம் தங்க மயிலாட்டம்

பூவாட்டம் வண்ண தேராட்டம்

தாலாட்டும் மங்கை சதிராட்டம்… கண்டு

தேனோடும் எங்கும் நதியாட்டம்



பாய்ந்துவரும் கண்கள் மேய்ந்து வரும் தலை

சாய்ந்துவரும் வெட்கம் சேர்ந்து வரும்

பாய்ந்துவரும் கண்கள் மேய்ந்து வரும் தலை

சாய்ந்துவரும் வெட்கம் சேர்ந்து வரும்

ஆடி வரும் வெள்ளம் பாடிவரும் பெண்ணை

தேடி வரும் இன்பம் கோடி பெரும்

மானாட்டம் தங்க மயிலாட்டம்

பூவாட்டம் வண்ண தேராட்டம்

தாலாட்டும் மங்கை சதிராட்டம்… கண்டு

தேனோடும் எங்கும் நதியாட்டம்