google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: 2011

Sunday, April 10, 2011

TASMAC holiday


டாஸ்மாக் விடுமுறை

தேர்தலை முன்னிட்டு,  தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள்,  11 ஏப்ரல் 2011 மாலை 5 மணிக்கு மூடப்பட்டு, 14 ஏப்ரல் 2011 ம் தேதி  திறக்கப்படவுள்ளன. 

Thursday, March 3, 2011

Kalyaana Samayal Sadham

ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா!
கல்யாண ... சமையல் சாதம்...

கல்யாண சமையல் சாதம்
காய்கறிகளும் பிரமாதம்
அந்த கௌரவ பிரசாதம்
இதுவே எனக்கு போதும்!

கல்யாண சமையல் சாதம்
காய்கறிகளும் பிரமாதம்
அந்த கௌரவ பிரசாதம்
இதுவே எனக்கு போதும்!
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா!
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா!
ஹ ஹ ஹ ஹ ஹ ஹா!

அந்தார பஜ்ஜி அங்கே
ஜும்சார சொஜ்ஜி இங்கே
அந்தார பஜ்ஜி அங்கே
ஜும்சார சொஜ்ஜி இங்கே
சந்தோசம் மீறி பொங்க!
ஹ ஹ ஹ ஹ ஹ ஹா!
இதுவே எனக்கு திங்க!

கல்யாண சமையல் சாதம்
காய்கறிகளும் பிரமாதம்
அந்த கௌரவ பிரசாதம்
இதுவே எனக்கு போதும்!
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா!
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா!
ஹ ஹ ஹ ஹ ஹ ஹா!

புளியோதரையும் சோறு
மிக பொருத்தமாய் சாம்பாரு
புளியோதரையும் சோறு
மிக பொருத்தமாய் சாம்பாரு
பூரி கிழங்கு பாரு!
ஹ ஹ ஹ ஹ ஹ ஹா!
இதுவே எனக்கு ஜோரு!

கல்யாண சமையல் சாதம்
காய்கறிகளும் பிரமாதம்
அந்த கௌரவ பிரசாதம்
இதுவே எனக்கு போதும்!

ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா!
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா!
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா!
ஹ ஹ ஹ ஹ ஹா!

ஜோரானா பேணி லட்டு
சுவையான சீனி புட்டு
ஜோரானா பேணி லட்டு
சுவையான சீனி புட்டு
ஏராளமான தட்டு!
ஹ ஹ ஹ ஹ ஹ ஹா!
இனி இஷ்டம் போல வெட்டு!

கல்யாண சமையல் சாதம்
காய்கறிகளும் பிரமாதம்
அந்த கௌரவ பிரசாதம்
இதுவே எனக்கு போதும்!
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா!
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா!
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா!
ஹ ஹ ஹ ஹ ஹ ஹா!

Wednesday, February 23, 2011

Shree Bhuvaneshwari Kavacham


ஸ்ரீ புவனேஸ்வரி கவசம்

அங்குச பாச மேந்தி அபயமே வரதம் தாங்கும்
பங்கயக் கரத்தள் பீதாம்பரமணி யிடையள் பொற்பூண்
பைங்கள நிரம்பப் பூண்டாள் பதினாறு கலையெழுத்துள்
பொங்கிய ஓரெழுத்தாள் புவனேசி பாதம் போற்றி
கணபதியே சரணம் கணநாதா ரக்ஷிப்பாய்
கந்தனுக்கு மூத்தோனே கவசத்தைத் தந்திடுவாய்
மாதாவின் கவசத்தை மங்களம் பெருகிடவே
மங்கள கணபதியே மகிழ்ந்தெனக் கருள்வீரே
பஞ்சமுக கணபதியே மனமாசறுத்துத் தேசருளி
வல்லபை கணபதியே வல்வினைகளைப் போக்கி

மஹத்தான உன்னருளை மாரிபோல் பொழிந்திட்டு
பூலோகம் உய்வுபெற புவனேசி கவசமீவாய்
புவனேச்வரித் தாயே புவனமெல்லாம் உய்வுபெற
புண்ணியத்தால் உன்நாமம் போற்றுகிறேன் கேட்டிடம்மா
என் ஹ்ருதயத் துள்ளிருந்து என்னறிவாகியே நீ
சீர்மிக்க மாதாவே சீக்கிரமே வந்திடம்மா
பாக்கியம் பலவேண்டிப் பகர்கின்றேன் கவசத்தை
பாலாம்பிகைத் தாயே பரிவுடனே வந்திடம்மா
படைப்புக்கும் முன்புள்ள பராசக்தித்தாயே கேள்
பாலன் இவனையுமே பார்த்து நீ ரக்ஷிப்பாய்

மூவர்கள் போற்றி ஏத்தும் முதல்வியே புவனேசி
தேவாதி தேவர்களும் தேவியுன்னை வழிபட்டே
சாகாவரம் பெற்று சர்வசக்தி எனப் புகழும்
லலிதாம்பிகைத் தாயே சடுதியில் வந்திடம்மா
மார்க்கண்ட மாமுனிவர் மஹான் துர்வாஸரிஷி
அகஸ்தியரிஷி போன்றோர் அன்னையுன்னை வழிபட்டே
இன்றும் இருந்துகொண்டு இவ்வுலகிற் கருளுவதை
என்னவென்று நானுரைப்பேன் என்தாயே உன் மகிமை
வாராஹி தேவியே வந்திப்பேன் உன் அடியை
பாதம் நகம் விரலைப் பார்வையால் நீ காத்திடம்மா

முழங்கால் இரண்டையுமே மலைமகளே காத்திடம்மா
தொடைகள் இரண்டையுமே  துர்க்கை நீ காத்திடம்மா
பின்புறத்தை நாரஸிம்மி பிறழாது காத்திடம்மா
வயிற்றைப் பைரவியே வலியவந்து காத்திடம்மா
மார்பை சிவதூதி மாண்புடனே காத்திடம்மா
வலதிடது தோளை வைஷ்ணவியே காத்திடம்மா
மனோன்மணித்தாயே என் மார்பையுமே ரக்ஷிப்பாய்
மஹாத்ரிபுர சுந்தரி நீ மனத்தையும் காத்திடம்மா
என் ஹ்ருதயத்தில் புவனேசி நீ இருந்து ரக்ஷிப்பாய்
கழுத்தை மாஹேந்திரியும் முகத்தை காத்யாயனியும்

தலையைத் தாக்ஷõயணியும் தலைக்குள் சிவ சக்தித்தாயும்
கண் காது வாய் மூக்கைக் காமாக்ஷியும் காத்திடம்மா
பற்கள் அனைத்தையுமே பத்மாக்ஷி காத்திடம்மா
நாக்கை வாக்தேவி நயமுடன் காத்திடம்மா
புருவங்களிரண்டையுமே பூதேவி காத்திடம்மா
புருவங்களின் நடுவில் ஸ்ரீதேவியிருந்து காப்பாய்
கண்ணொளி யாயிருந்து காப்பாய் காமேச்வரித்தாயே
கண்களின் மணிகளையே காலஹந்த்ரி காப்பாய் நீ
கண்ணிமையைக் காத்திடம்மா காத்யாயனித்தாயே
அங்கங்களனைத்தையுமே ஆதிசக்தி காத்திடம்மா

என்னை நீ ரக்ஷிப்பாய் என் தாயே ரக்ஷிப்பாய்
பூரணி பூமியிலும் மேலே பவானித்தாயும்
திக்குகள் தோறுமே திருபுராம்பா காத்தருள்வாய்
மேல்கீழ் குறுக்கெல்லாம் மூகாம்பா ரக்ஷிப்பாய்
காத்திடம்மா காயத்ரீ கண்ணிமைபோல் காத்திடம்மா
வாராஹி கௌமாரி நாரஸிம்மி ரக்ஷிப்பாய்
சண்டிகை சக்தி கௌரி சங்கடங்கள் தீர்த்திடுவாய்
அஷ்டலக்ஷ்மித் தாயே அமர்ந்திடம்மா என்னுடனே
பிரியா திருந்திடம்மா ப்ரத்யக்ஷம் ஆகிடம்மா
புவனேச்வரித்தாயே புவனமெல்லாம் நிறைந்தவளே

புவனேசி என்றாலே புண்ணியம் பெருகிடுமே
புண்ணிய புருஷர்கள் புவனேசித் திருநாமம்
போற்றிடுவர் போற்றியுமே புண்ணியத்தைப் பெருக்கிடுவர்
திருவடியும் பற்றிடுவர் திருநாமம் ஜெபித்திடுவர்
நாமத்தின் மஹிமையினால் நமனையும் வென்றிடுவர்
ஸகல ஸெளபாக்யமும் ஸாயுஜ்ய முக்தியுமே
தந்திடுவாள் புவனேசி தரித்திரத்தை ஓட்டிடுவாள்
சாந்தியின் வடிவுகொண்ட ஸர்வேசி நமஸ்காரம்
சிரத்தை வடிவான ஸ்ரீமாதா நமஸ்காரம்
காந்தியின் வடிவான காமாக்ஷி நமஸ்காரம்

லக்ஷ்மியின் வடிவான லலிதாம்பா நமஸ்காரம்
விருத்தியின் வடிவான வ்ருத்தாம்பா  நமஸ்காரம்
ஸ்மிருதியின் வடிவான ஸ்கந்தமாதா  நமஸ்காரம்
தயையின் வடிவான தர்மாம்பா நமஸ்காரம்
துஷ்டியின் வடிவான துக்கஹந்த்ரீ  நமஸ்காரம்
மாத்ரு வடிவான மஹாதேவி  நமஸ்காரம்
மயக்க மகற்றிடுவாய் மாஹேசி நமஸ்காரம்
தேவியே புவனேசி தினமுன்னை நமஸ்கரிப்பேன்
தீராத வியாதிகளைத் தீர்த்து நீ ரக்ஷிப்பாய்
அகந்தையை ஒழித்திடுவாய் அம்மா புவனேசி

பிறவிப்பிணி தீர்ப்பாய் பிரம்மசக்தித்தாயே கேள்
என் துன்பத்தைத் துடைத்திடவே தீப துர்க்கையாய் வந்திடம்மா
துர்காம்பிகைத் தாயே துரிதத்தை விலக்கிடம்மா
அஷ்டமா ஸித்திகளை அடியேனுக் கருளிடம்மா
மாகாளியாய் வந்து மனமாயையை ஒழித்திடம்மா
சாமுண்டீச்வரியே ஸம்சயத்தைப் போக்கிடம்மா
காளிகா தேவியே காத்திடம்மா என்னையும் நீ
வாராஹியாய் வந்து வழியில் காத்தருள்வாய்
இந்திராணித்தாயே இம்மையில் நீ ரக்ஷிப்பாய்
வைஷ்ணவி மாதாவாய் வந்து வரமருள்வாய்

கௌமாரித் தாயே நீ காத்திடம்மா உள்ளிருந்து
ப்ரஹதாம்பிகைத் தாயே பிரமையையும் போக்கிடுவாய்
துன்பம் துயரத்தைத் துடைத்துக் காப்பாற்றிடவே
காமக் குரோதத்தைக் கலக்கி விரட்டிடவே
சத்துருவாம் பகைவனையும் சம்சய அரக்கனையும்
துஷ்டர்களை விரட்டிடவே வனதுர்கா வந்திடம்மா
பத்துத் திக்கிலுமே பத்ரகாளி காத்திடம்மா
மாதா பாலாம்பிகையே மாயையைப் போக்கிடம்மா
சும்ப நிசும்பனைப் போல் அகந்தையை அழித்திடம்மா
ஸிம்ம வாஹனத்தில் ஜய துர்க்கே வந்திடம்மா

ஜகத் ஜனனி ஜகன்மாதா ஜய புவனேசித்தாயே
மமதையில் மயங்காமல் மாதங்கி காத்திடுவாய்
அனைத்தையும் கொடுக்கும் அன்னபூர்ணேச்வரியே
குறையற்ற கல்வியைக் கொடுத்திடுவாய் கலைவாணி
மஹிஷாசுரனையும் மற்றுமுள்ள தூம்ரனையும்
சண்டனையும் முண்டனையும் ரத்தபீஜாசுரனையும்
அகம்பாவ அசுரர்களை அழித்தவம்மே ஸ்கந்தமாதா
சாமுண்டீஸ்வரியே சந்தோஷமெனக்கருள
சக்தியாய் வந்திடம்மா புவனாம்பிகைத் தாயே
சத்துசித்தின் வடிவான சித்தேச்வரித் தாயே

ஜயந்தி மங்களா காளி ஜயஜய போற்றி போற்றி
பத்ரகாளி கபாலினியே பராபரே போற்றி போற்றி
பூரண புராதனியே புவனேசி போற்றி போற்றி
அகிலாண்டேச்வரியே அன்னையே போற்றி போற்றி
ஆதிபராசக்தியான ஆசோபனா போற்றி
கள்ளம் கபடம் நீக்கும் காமாக்ஷியே போற்றி
கருணைக் கடலான வம்மே காத்யாயனியே போற்றி
ஆயிரம் நாமமுள்ள ஆதி புவனேசி போற்றி
சாந்தி சுகம் தருவாய் ஷண்முகன் தாயே போற்றி
ஹயக்ரீவர் போற்றி ஏத்தும் ஆதிலலிதா போற்றி

சிரத்தா பக்திதரும் சிவகாமி போற்றி போற்றி
கலிதோஷம் அகற்றுவிப்பாய் கல்யாணி போற்றி போற்றி
ஏகாக்ஷரம் தருவாய் வேதவேத்யா போற்றி போற்றி
ஈசனுள் குடியிருக்கும் புவனேசி போற்றி போற்றி
லக்ஷ்மி வாணி போற்றும் லலிதாம்பா போற்றி போற்றி
ஹ்ரீங்கார ரூபமான புவனமாதா போற்றி போற்றி
ஹரிப்ரம்மேந்திரர்கள் அகத்துள்ளோய் போற்றி போற்றி
ஸர்வேசி ஸாக்ஷிரூபே ஸர்வக்ஞே போற்றி போற்றி
ககாரார்த்தா கபாலினி காலஹந்த்ரி போற்றி போற்றி
ஹம்சமந்த்ர மயமான ஹம்ஸவதி போற்றி போற்றி

லகாராக்ய லதாபூஜ்யா ராஜேச்வரி போற்றி போற்றி
ஹ்ரீம் மத்யா ஓங்காரி ஜகன்மாதா போற்றி போற்றி
ஸநகாதி முநித்தேயே ஸச்சிதானந்தே போற்றி போற்றி
கல்யாணீ காதிவித்யே கமலாக்ஷி போற்றி போற்றி
லகாரிணீ லப்தரூபே லப்தசக்தே போற்றி போற்றி
ஹ்ரீங்கார மூர்த்தித் தாயே புவனேசி போற்றி போற்றி
பஞ்ச தசாக்ஷரித்தாயே பவநாசினி போற்றி போற்றி
ஸ்ரீமாதா ஸ்ரீமஹாராஜ்ஞீ சீருடனே வந்திடம்மா
ஸிம்ஹாஸனேச்வரியே சீக்கிரமே வந்திடம்மா
சிதக்னிகுண்ட ஸம்பூதா சித்ரூபி வந்திடம்மா

ஸர்வாபரண பூஷிதையே ஸர்வேசி வந்திடம்மா
சிவாயெனப் பெயர்கொண்ட சிந்தாமணி வந்திடம்மா
மங்களத்தைச் செய்திடம்மா மாதா புவனேஸ்வரியே
ப்ரும்ம விஷ்ணு ருத்ரன் ஈசானன் நால்வருடன்
ஸதாசிவனையுமே பீடமாக்கிக் கொண்ட சிவே
ஐவரான மஞ்சத்தில் அமர்ந்து ஜோதியானவளே
கதம்பவனவாஸினியே காமகோடி வரமருள்வாய்
சாக்தப் பிரணவத்தை சடுதியில் தந்திட்டு
கல்மஷங்களைப் போக்கிக் கலிதோஷ மகற்றிடுவாய்
நகக்கண் வழியாக நாரணனைச் சிருஷ்டித்தோய்

ஹரிஹர ப்ரம்மாக்கள் அனன்யமாய்த் தொழுதேத்தும்
தேவர்களும் முக்தர்களும் தினமும் தொழுதேத்தும்
ஸித்தர்களும் பக்தர்களும் ஜன்மமெல்லாம் தொழுதேத்தும்
புவனேஸ்வரித்தாயே போதுமம்மா இப்பிறவி
மறுபிறவி இனிவேண்டாம் மாதா புவனேஸ்வரியே
பிறவிப்பயன் தந்த புவனேஸித் தாயே கேள்
பற்றினேன் திருவடியைப் பற்றறுப்பாய் புவனேசி
புவனேசி உன்நாமம் பிணியறுக்கும் திருநாமம்
என்றுணர்ந்தேன் உன்னருளால் என்தாயே புவனேசி
மூலமந்த்ராத்மிகையே முக்தியும் தந்திடம்மா

பக்தனுக்கு வசமாகும் பார்வதியே வந்திடம்மா
பயத்தைப் போக்கிவிடும் பரதெய்வமே வருவாய்
நிர்மலா நித்யா நிராகுலா வந்திடுவாய்
மோகநாசினித்தாயே மோகத்தைப் போக்கடிப்பாய்
பாபநாசினி தாயே பாபத்தைப் போக்கிடுவாய்
கோபத்தைப் போக்கடிக்கும் க்ரோத சமனித்தாயே
லோபித்தன மகற்றும் லோபநாசினியே கேள்
சந்தேகம் அகற்றுவிக்கும் ஸம்சயக்னீ கேட்டிடம்மா
பாபநாசினி மாயே பந்தத்தைப் போக்கிடம்மா
பேதபுத்தியை அகற்றும் பேதநாசினியே கேள்

மரணபய மகற்றிடுவாய் ம்ருத்யுமதனித் தாயே
சுகத்தைத் தந்தருள்வாய் சுகப்ரதா சுகமருள்வாய்
துராசாரத்தை யோட்டும் துராசாரசமனீ கேள்
ஸர்வேச்வரீ ஸர்வமயீ ஸர்வ மந்த்ரஸ்வரூபிணியே
மாஹேச்வரீ மஹாதேவி மஹாலக்ஷ்மீ சுந்தரியே
மஹாரூபே மஹாபூஜ்யே மஹாபாதக நாசினியே
பானுமண்டல மத்யஸ்தே பைரவி பகமாலினியே
பத்மாஸனே பகவதி பத்மநாப சகோதரியே
புருஷார்த்த ப்ரதே பூர்ணே போகினி புவவேஸ்வரியே
தத்வாஸனே தத்வமயீ தத்துவத்தை உணர்த்திடுவாய்

குமாரகணநாதாம்பா அஹங்காரம் அகற்றிடுவாய்
ராஜ ராஜேச்வரித் தாயே ராஜ்யலக்ஷ்மீ வரமருள்வாய்
ஸச்சிதாநந்தரூபிணியே ஸதாநந்தம் தந்திடுவாய்
ஸ்ரீசக்ர ராஜநிலயே ஸ்ரீமத் த்ரிபுர சுந்தரியே
ஸ்ரீலலிதாம்பிகைத் தாயே சீக்கிரமே வரமருள்வாய்
வரமருள்வாய் வரமருள்வாய் வந்திப்பேன் புவனேசி
புவனேசி திருவடியைப் புண்ணியத்தால் பற்றிவிட்டேன்
சிக்கெனப் பற்றிவிட்டேன் புவனேசி உன்னடியை
பற்றெல்லாம் அறுத்திடுவாய் பராசக்தி புவனேசி
பிறந்து பிறந்திளைத்தேன் பிறவாவரமருள்வாய்

துன்பமெல்லாம் விலக்கித் துரியத் திருத்திடுவாய்
ஞான வைராக்கியமும் நான்மறை ரகசியமும்
ஆகம புராணத்தின் அகத்துள்ள ரகசியமும்
வேதாந்த ரகசியமும் விளக்கிடுவாய் புவனேசி
பிறவிப்பிணி அகற்றிப் பிரம்மமய மாக்கிடம்மா
எல்லாம் சிவமெனவே எனக்கு நீ அருளிடுவாய்
நெஞ்சத்துள் நீ இருந்து நித்ய முக்தனாக்கிடம்மா
அல்லும் பகலும் அடியேன் இவன் உன்னையன்றி
மற்றோர் நினைவின்றி மஹராஜி போற்றுகிறேன்
போற்றுகிறேன் போற்றுகிறேன் புவனேசி பொன்னடியை

தலைமேலாம் தளத்தில் தந்திடம்மா தரிசனமும்
தரிசனம் தந்திட்டுத் தரித்திரத்தை ஒழித்திடம்மா
உள்ளத்துள்ளேயிருந்து உண்மையினை யுணர்த்திடம்மா
திரிபுர சுந்தரித்தாயே தீர்த்திடுவாய் வினைகளையும்
நான் உன்னைவிடமாட்டேன் நவின்றிடுவாய் உபதேசம்
ஹ்ரீங்காரம் தந்துதாயே என்னில் உனைக்காட்டி
உன்னில் எனைக்காட்டி உய்விப்பாய் என்னையும்நீ
ஆத்ம சக்தியாயிருந்து அன்புடன் ரக்ஷிப்பாய்
அறம் பொருள் இன்பத்தை அம்மே கொடுத்திடுவாய்
வீட்டையும் தந்திட்டு விதியெல்லாம் விரட்டிடுவாய்

பேரின்ப விடருளிப் பிறவாவரம் தந்து
ப்ரம்மானந்தத்தோடு பிரியாதிருந்திடச் செய்
திடம்பெறவே உன்னை நானென்றுணர்ந்திடச் செய்
புவனத்தைப் பொய்யென்று புவனேசி காட்டிடம்மா
விருப்பு வெறுப்பற்று என்னை இருத்திடுவாய்
நிராசையான வீட்டில் என்னையும் நீ நிறுத்திடம்மா
உள்ளும் புறமும் உன்னையே காட்டிடம்மா
காணும் காட்சியெல்லாம் காந்திமதி நீ என்றும்
ஓசை ஒளியெல்லாம் உமாதேவி தானென்றும்
ஸ்தாவர ஜங்கமமெலாம் ஜகத்தாத்ரீ நீயென்றும்

புவனேசி உணர்த்திடுவாய் புனிதனாக மாற்றிடுவாய்
என்னையுமே காத்திடுவாய் என்னம்மே புவனேசி
நின்றும் இருந்துமே நின்நாமம் ஏத்திடுவேன்
நடந்தும் கிடந்துமே நானுன்னைப் போற்றிடுவேன்
இமைப்பொழுதும் உன்நாமம் மறந்திடமாட்டேன் நான்
என்நினைவெல்லாம் நீயாக நின்றிடுவாய் புவனேசி
என் உணவெல்லாம் உனக்கேற்ற நைவேத்யமாகுமம்மா
நான் நடப்பதே பிரதக்ஷிணமாய் நம்பிவிட்டேன் தாயே கேள்
என் உடலாட்டமெல்லாம் உனக்கருளும் முத்திரையாம்
என் உயிருக்கும் உயிரான ஆத்மசக்தி நீயன்றோ

அங்கிங்கெனாதபடி எங்கும் சக்தி மயம்
அழகிலும் அன்பிலும் அறிவிலும் சக்திமயம்
அனைத்தும் பராசக்தி அணுக்களெல்லாம் சக்திமயம்
சக்தியில்லாத தெய்வம் சவமென் றுணர்ந்திடடா
தெய்வங்களுக்குள்ளே தேவி யிருப்பதாலே
சக்தியுள்ள தெய்வமென்று சடுதியில் சொல்லுகிறார்
ஹரிஹர ப்ரம்மாவும் அன்புள்ள தேவர்களும்
ரிஷிகளும் ஞானிகளும் ஸித்தர்களும் பக்தர்களும்
சக்தியைத் தொழுவதாலே சர்வசக்தியும் பெற்றார்
புவனேசி மாதாவை முழுமனத்தோடு நீயும்

அகத்துள் துதித்தேத்தி அன்புடன் சரணடைந்து
இடைவிடாது உனதகத்துள் இக்கணமே இருத்தி
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் என்று உறுதியாக ஏத்தியும் நீ
மலைபோல் இருந்திட்டால் மஹத்துவம் புலப்பட்டு
தன்னில் புவனசக்தி தரிசனம் காணலாமே
உன்னில் புவனசக்தி ஒன்றையே கண்டிடலாம்
புவனமெல்லாம் புவனசக்தி புலப்படுமுன்னுள்ளே
அகமும் புறமும் ஆதிசக்தி காண்பதற்கு
அன்னை புவனேஸ்வரியை அகத்துள் இருந்திடடா
அன்னை புவனேஸ்வரியை அகத்துள் இருத்துவோர்க்கு

அழகெலாம் சக்தியாகும் அன்பெலாம் சக்தியாகும்
அறிவெலாம் சக்தியாகும் அனைத்துமே சக்தியாகும்
சத்தியம் சக்தியாகும் ஞானமும் சக்தியாகும்
சாந்தம் ஆனந்தம் சக்தியாய்த் தோன்றிவிடும்
ஆனந்தம் வேண்டிநீயும் ஆதிசக்தி புவனையையும்
அன்புடன் பற்றிடடா அன்னை அருள் கிட்டிடுமே
பகுத்தறிவுள்ள நீயும் பற்றிடடா புவனையையும்
அனைவருள்ளிருக்கும் ஆன்மா புவனேசி
அதுவே நானென்று அகத்துள் உணர்ந்திடலாம்
அழிவிலாச் சக்தி ஆன்ம சக்தியாய்

அகத்துள்ளே உண்மையாய் ஆன்மாவாய் இருப்பதை
இம்மையில் உணர்ந்து நான் இன்புற்றிருப்பதற்கு
அமைதியாய் வாழ்வதற்கு அருள்வாய் வரமெல்லாம்
அருட்குலத் தாயே ஆன்ம சக்தியே
அற்புதமாய் நான் வாழ அடியனுக்கருள்வதுடன்
அம்மையே ஆன்மா அதுவே நானும்
அதுவே நீயும் அனைத்தும் அதுவென்று நீ உணர்த்து
மனமே! அம்மையின் உருவம் அன்பெர்பர் ஞானிகள்
ஸித்தர்கள் அன்பையே எனதம்மை யென்பர்
அன்பின்றி உலகில் வளமில்லை மறவாதே

பார்க்குமிடமெல்லாம் அன்பினைக் கண்டிட
பராசக்தியாம் அன்பைப் பற்றிடு இக்கணமே
பாவனையுடன் நீயும் அடைக்கலமாகி விடு
பார்க்கலாம் <உனக்குள் அற்புதக் கடவுளை
அன்பே தானாய் அகத்துள் ஆன்மாவாய்
அம்மையே உணரச் சரண மடைந்திடப்பா
உனதறிவான உனது ஆன்மாவை
உனக்குள் நீ உணர உடனடியாக
இம்மையில் இக்கணமே உண்மையாகச் சரணடைவாய்
மாதாவின் அருளால் மாசற்ற உனதான்மா

சுயம் ஜோதியாய் சுத்தப் பிரம்மமாய்
அகத்துள் உணரலாம் நம்பிடுவாய் மனமே
இச் ஜகத்தையெல்லாம் அருட்குல மாக்கிடவும்
நல்லறிவாற்றலும் நலந்தரு ஞானமுடன்
பூரண மனிதனாய்ப் புவனை நீ எனை ஆக்கி
பாக்கியத்தோடு பாரெல்லாம் புகழ்பெறப்
புனிதனாக்கி என்னைப் பொலிவுறச் செய்குவாய்
வேதவேதாந்த வாழ்வும் வீரத்தோடறமும் ஈந்து
நல்ல நீதியோடருளும் தந்து
நன்நெறியில் எனை இருத்தி வைத்து

புத்தியில் அமைதியோடு அன்பெனும் அழகும் தந்து
அருட்குலமோங்கும் தொண்டை இடைவிடா தருளித்தாயே
ஈதலில் இன்பம்தந்து இன்பத்தில் இறையருள் காட்டிச்
சாதலும் பிறப்புமில்லா வரத்தையும் தந்திட்டென்னை
பூரண ப்ரம்மஞானம் பொருந்திய வாழ்வையருளி
தான்தானாய் நிலைத்திடவே நீ தந்திடம்மா
மனமேகவசத்தை தினமுமோதி காயத்தைசுத்திசெய்து
கவசத்தைப் பொருள் உணர்ந்து கருத்தோடு ஓதிவிட்டால்
கள்ளம் கபடறுக்கும் காமக் கசடறுக்கும்
வினைப்பயனையும் விரட்டும் புவனேசி கவசம் நம்பு

பகுத்தறிவுள்ள சீடா பற்றிடடா கவசத்தை
கவசத்தை ஓதியும் நீ கலிதோஷ மகற்றிடடா
கவச பாராயணத்தால் கள்ளமில்லா வுள்ளமாகும்
கள்ளமில்லா வுள்ளத்தில் காணலாமே புவனையையும்
மனக்கோட்டை கட்டாமல் புதுக்கோட்டை வந்திடடா
புதுக்கோட்டையுள் நீயும் புவனேசி கண்டிடடா
பற்றிடடா புவனேசி பாதமதைப் பற்றிடடா
பற்றிவிட்டால் பற்றற்ற பரசுகமும் கிட்டிவிடும்
ஆனந்தமாகவே நீ அகத்துள் மாறிடுவாய்
அன்னையின் கவசத்தை அன்புடனே நெக்குருக

ஆசாரநிஷ்டையுடன் அனுதினமும் ஓதுவீரேல்
அறம் பொருள் இன்பம் வீடு அனுக்ரஹித்தாட் கொண்டிடுவன்
அதிசுலபமாகவேதான் அன்னையுமே முன்னிற்பள்
மாதாவின் கவசமிதை மனமுருகி ஓதுவீரேல்
அஷ்ட லக்ஷ்மியும் அகலாதிருந்திடுவள்
மறவாது ஓதிட்டால் மஹராஜி அருளுண்டாம்
பொருளுண்டாம் மாதாவின் புண்ணிய லோகமுண்டு
ஆசார ஒழுக்கமுடன் அன்பு நேமநிஷ்டையுடன்
சிரத்தா பக்தியுடன் ஜகன்மாதா கவசமிதை
ஒருமனத்தோ டோதுவீரேல் மாபாவம் மறைவதுடன்

அன்புருவாம் அம்மையை அகத்துள் <உணர்ந்திடலாம்
மாதாவும் முன்வந்து மஹத்தான வரமருள
சொன்னபடி செய்து நீ சுகமடைவாய் மனமே கேள்

(
ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம் சக்தி)