google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: August 2010

Thursday, August 26, 2010

தமிழ்ப் பழமொழிகள்

  • அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

  • அகத்தின் அழகு முகத்திலே.

  • அகப்பட்டவனுக்கு அஷ்டமத்திலே சனி, ஓடிப்போனவனுக்கு ஒன்பதாமிடத்திலே ராசா.

    அச்சமற்றவன் அம்பலம் ஏறுவான்.

    அஞ்சிலே வளையாதது அம்பதில் வளையுமா?
  • அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்.

  • அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.

  • அடிக்கிற காற்றுக்கும்,பெய்கிற மழைக்கும் பயப்படு.

    அடியாத மாடு படியாது.

  • அடுத்த வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே.

    அதிகாரி வீட்டு கோழிமுட்டை குடியானவன் வீட்டு அம்மியையும் உடைக்கும்.

    அதிஷ்டம் இருந்தால் அரசு பண்ணலாம்.

    அதிஷ்டவான் மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும்.

    அம்மணத்தேசத்தில் கோமணம் கட்டினவன் பைத்தியக்காரன் .

  • அம்மாவை ஆத்தங்கரையில் பார்த்தா பிள்ளையை வீட்டுல போய் பார்க்கவேண்டாம்.

  • அம்மாவைக் குளிக்குமிடத்தில் பார்த்தால் மகளை வீட்டில் பார்க்கவேண்டியதில்லை.

  • அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.

  • அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.

  • அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.


  • அரை காசு உத்தியோகமாக இருந்தாலும் அரசாங்க உத்தியோகமாக இருக்கணும்.

  • அவிசாரியானாலும் முகராசி வேண்டும்.

  • அவுசாரி என்று யானை மேல் போகலாம், திருடி என்று தெருவில் போக முடியாது.

  • அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்.

  • அழுதாலும் தொழுதாலும் அவதான் பிள்ளை பெறணும்.

  • அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.

  • அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

  • அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.

  • அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.

  • அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்.

  • அறுக்க மாட்டாதவன் கையில் ஐம்பத்தெட்டு அறிவாள்.

  • அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்.

  • அறுப்புக்காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி. 

  • ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறுப்பதில்லை.

  • ஆசை அறுபது நாள் , மோகம் முப்பது நாள்.
  • ஆசை இருக்குகிறது தாசில் பண்ண,அதிஷ்டம் இருக்கிறது கழுதை மேய்க்க.


  • ஆட மாட்டாத நடன மாதிற்குக் கூடம் கோணலாம்.

  • ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.

  • ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.

  • ஆடிப் பட்டம் தேடி விதை.

  • ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறதாம்.

  • ஆடு பகை குட்டி உறவா?

  • ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.

  • ஆடையில்லாதவன் அரை மனிதன்.

  • ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.

  • ஆதாயமில்லாமல் வியாபாரி ஆற்றோடு போகமாட்டான்.

  • ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.

  • ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.

  • ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.

  • ஆழம் தெரியாமல் காலை விடாதே.

  • ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்.

  • ஆற்றிலே போகுது தண்ணீர் அப்பா குடி ஆத்தாள் குடி.

  • ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.

  • ஆறிலும் சாவு நூறிலும் சாவு.

  • ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.

  • ஆனைக்கும் அடிசறுக்கும்.

  • இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.

  • இக்கரைக்கு அக்கரை பச்சை.

  • இரக்கப் போனாலும் சிறக்கப் போ.

  • இரும்படிக்கும் இடத்தில் ஈக்கென்ன வேலை.

  • இரைக்கிற ஊற்றே சுரக்கும்.


  • இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.

  • இளங்கன்று பயமறியாது.

  • இளமையில் கல்.

  • இறந்த காலத்தை என்றும் பெற இயலாது.

  • இனம் இனத்தையே சாரும்.

  • இனம் இனத்தோடு சேரும்.

  • இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுக்கமாட்டானா?

  • ஈர நாவிற்கு எலும்பில்லை.

  • உடுத்திக் கெட்டான் பார்ப்பான், உண்டு கெட்டான் வெள்ளாளன்.

  • உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்காதே.

  • உதட்டில் உறவு உள்ளத்தில் பகை.

  • உதைப்பானுக்கு வெளுப்பான் சலவைக்காரன்.

  • உப்பிட்டவரை உள்ளளவும் நினை.

  • உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?

  • உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
  • உயிர் காப்பான் தோழன்.

  • உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்பாது.

  • உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?

  • உரலு போயி மத்தளத்துக்கிட்ட முறையிட்டதாம்.

  • உலை வாயை மூடலாம், ஊர் வாயை மூட முடியாது.

  • உளவு இல்லாமல் களவு இல்லை.

  • உறவு போகாமல் கெட்டது, கடன் கேட்காமல் கெட்டது.

  • உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்.

  • ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சினேகம் இழுக்கும்.

  • ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.

  • ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தா தன் பிள்ளை தானே வளரும்.

    ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே.

  • ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி.

  • ஊருடன் ஒட்டி வாழ்.

  • ஊருடன் பகைக்கின் வேறுடன் கெடும்.

  • எட்டாக் கனிக்குக் கொட்டாவி விடாதே.

  • எடுக்கிறது பிச்சை, ஏறுகிறது பல்லக்கு.

  • எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?

  • எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றினாற்போல்.

  • எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம்.

  • எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.

  • எரியும் கொள்ளிகளில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?

  • எருமை வாங்கும் முன் நெய் விலை பேசாதே,

  • எலி வளையானாலும் தனி வளை.

  • எலி வளையானாலும் தனி வளைவேண்டும்.

  • எளியாரை வலியார் வாட்டினால் வலியாரைத் தெய்வம் வாட்டும்.

  • எறும்பூரக் கல்லும் தேயும்.

  • ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.

  • ஏர் பிடித்தவன் என்ன செய்வான்,பானை பிடித்தவள் பாக்கியம்.

    ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல்,செய்கிறவனுக்கு தலைச்சுமை.

    ஏழை என்றால் மோழையும் பாயும்.

  • ஏழை சொல் அம்பலம் ஏறாது.
     
  • ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.
  • ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.

  • ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

  • ஐந்தும் மூன்றும் அடுக்காய் இருந்தால் அறியாப்பெண்ணும் கறி சமைப்பாள்.

  • ஐயர் இடம் கொடுத்தாலும் அடியார் இடம் கொடார்கள்.

    ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்.

  • ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்காது.

  • ஒரு கண்ணுல வெண்ணை மறு கண்ணுல சுண்ணாம்பு.

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

  • ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்.

  • ஒருவனைக் கொன்றவன் உடனே சாவான்,பலரைக் கொன்றவன் பட்டமாள்வான்.


  • ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.

  • ஓட்டுல புட்டவிச்சு உமிக்காந்தல்ல களி கிண்டிருவா.

    ஓடும் நாயைக் கண்டால் துரத்தும் நாய்க்கு இளக்காரம்.

  • ஓரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்.

  • ஓருவனுக்கு ஒருத்தி.

  • கஞ்சி கண்ட இடம் கைலாசம் , சோறு கண்ட இடம் சொர்க்கம் .

  • கட்டி வைத்த பணத்தைத் தட்டிப் பறித்தார்போல.


  • கடன் இல்லாக் கஞ்சி கால் வயிறு போதும்.

  • கடுகு சிறிதானாலும் காரம் பெரிது.

  • கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?

  • கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்காதே.

  • கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்.

  • கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குக் குறைவில்லை.

  • கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்.

  • கண்கெட்ட பிறகா சூரிய வணக்கம்?

  • கண்ணு சிறுசு, காண்பதெல்லாம் பெரிசு.


  • கந்தையானாலும் கசக்கிக் கட்டு.

  • கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்.

  • கரும்பு கட்டோடு இருந்தால் எறும்பு தானே வரும்.

  • கரும்பு தின்னக் கூலியா?

  • கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?

  • கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.

  • கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.
     
  • கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல.

  • கல்லடிக்குத் தப்பினாலும் கண்ணடிக்குத் தப்பாது.

  • கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.

  • கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம்.

  • கழுதை அறியுமா கற்பூர வாசனை?

  • கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?

  • கள்ளன் அச்சம் காடு கொள்ளாது.

    கற்றுக் கொடுத்த பாடமும் கட்டிக் கொடுத்த சாதமும் நீண்ட நாள் வருவதில்லை.

  • கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.

  • கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு.

  • கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.

  • கன்னி இருக்க காளை மணம் ஏறலாமா ?

  • காக்காய் பிடித்தாவது காரியம் சாதித்துக்கொள்.

  • காக்கை உட்கார பனம்பழம் விழுந்ததுபோல.

  • காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.

  • காகம் திட்டி மாடு சாகாது.

  • காஞ்சிபுரம் போனால் காலாட்டி சாப்பிடலாம்.

  • காமாலைக் காரனுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள்.

  • காய்த்த மரம்தான் கல்லடிபடும்.

  • காலம் போகும் வார்த்தை நிற்கும்.

  • காலைச் சுற்றின பாம்பு கடியாமல் விடாது.

    காற்றுள்ளே போதோ தூற்றிக்கொள்.

  • காவிரி ஆறு கஞ்சியாப் போனாலும் நாய்க்கு நக்கித்தான் குடிக்கணும்.

    காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்.

  • காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.

  • கிட்டாதாயின் வெட்டென மற.

  • கிடைக்கப்போகும் பலாக்காயினும் கிடைக்கும் களாக்காய் மேல்.

  • கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?

  • கிளி பிடித்தோ,புலி பிடித்தோ?

    குட்டுப் பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப் பட வேண்டும்.

  • குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.

  • குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு

  • குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல்.

  • குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?

  • குபேரன் பட்டம் கொள்ளைபோனாலும் அதிர்ஷ்ட வீணனுக்கு அகப்பைக் காம்பூ அகப்படுமா?

    குமரிக்கு ஒரு பிள்ளை , கோடிக்கு ஒரு வெள்ளை .

  • குரைக்கிற நாய் கடிக்காது.

  • குளிக்கப் போய்ச் சேறு பூசிக் கொள்ளலாமா?

  • குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை.

  • குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.

  • குறைகுடம் கூத்தாடும்.

  • குனியக் குனியக் குட்டுவான், குனிந்தவன் நிமிர்ந்தால் குட்டினவன் ஓடுவான்.

  • கூட்டுற வெலக்குமாத்துக்குக் குஞ்சரம்னு பேராம்.

  • கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.

  • கூத்தாடி கிழக்கே பார்த்தான் , கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.

  • கூரையில சோத்த போட்டா ஆயிரம் காக்கா.

  • கூழானாலும் குளித்துக் குடி.

  • கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை.

  • கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு.

  • கெடுவான் கேடு நினைப்பான்.

  • கெண்டையைப் போட்டு வராலை இழு.

  • கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே.

  • கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.

  • கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்.

  • கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?

  • கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்?

  • கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து கொக்கைப் பிடிப்பதுபோல.

  • கொட்டினாள் தேள் கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சி.

  • கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும்.

    கொல்லன் தெருவில் ஊசி விற்பதுபோல்.

  • கொல்லன் பட்டறையில் ஊசி விற்கலாமா?

  • கொள்ளும் வரைக்கும் கொண்டாட்டம் , கொண்ட பிறகு திண்டாட்டம்.

  • கோழி மிதித்து குஞ்சு முடமாகுமா?
     
  • கோழி மிதித்துக் குஞ்சு சாகாது.

  • கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகிவிடாது.

  • சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்.

  • சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல.

  • சர்க்கரை என்றால் தித்திக்குமா?

  • சனியன் புடிச்சவளுக்குச் சந்தைக்குப் போனாலும் புருசன் அகப்படமாட்டான்.

    சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரமும் முழங்கால் மட்டு.

  • சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில் விழுவது மேல்.

  • சாண் ஏறினால் முழம் வழுக்கும்.

  • சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரங்கொடுக்கமாட்டான்.


  • சித்திரமும் கைப்பழக்கம்.
     
  • சித்திரை மாதத்தில் பிறந்த சீர்கேடனுமில்லைஐப்பசி மாததில் பிறந்த அதிர்ஷ்டவானுமில்லை.


  • சிறு துரும்பும் பல் குத்த உதவும்.

  • சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது.

  • சிறுகக் கட்டிப் பெருக வாழ்.

  • சிறுவர் இட்ட வெள்ளாமை விளஞ்சாலும் வீடு வந்து சேராது.

  • சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடி

  • சீலை இல்லை என்று சித்தி வீட்டுக்கு போனாளாம் , அவள்  ச்சம் பாயை கட்டிகொண்டு எதிரே வந்தாளாம் .

  • சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை.


  • சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம்.

  • சுவரை வைத்துக் கொண்டல்லவா சித்திரம் எழுத வேண்டும்.

  • சூடு கண்ட பூனை அடுப்பங்கரையில் சேராது .

  • சொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா?

  • சொல்லாது பிறவாது, அள்ளாது குறையாது.

  • சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்?
  • சொறி பிடித்தவன் கை சும்மா இருக்காது.

  • சோளியன் குடுமி சும்மா ஆடுமா?

  • தட்டிக்கேட்க ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டம்.

    தடி எடுத்தவன் தண்டக்காரன்.

  • தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் .

  • தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.

  • தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.

  • தம்பியுடையான் படைக்கஞ்சான்.

  • தருமம் தலை காக்கும்.

  • தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன.

  • தலைவலியும் தரித்திரமும் தனக்கு வந்தால் தான் தெரியும்.

  • தன் கையே தனக்குதவி.

  • தன் பலம் கொண்டு அம்பலம் ஏறவேண்டும்.

  • தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்.

  • தனக்கு மிஞ்சித் தான் தருமம்.

  • தன்னைப்போல் பிறரை நினை.

  • தனிமரம் தோப்பாகாது.

  • தாட்சண்யவான் தரித்திரவான்.

  • தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்.

  • தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை.

  • தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.

  • தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.

  • தான் ஆடாது போனாலும் தன் தசை ஆடும்.

  • தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்.

  • தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே.

  • தானாடா விட்டாலும் சதையாடும்.

  • தானே கனியாத பழத்தைத் தடிகொண்டு அடிப்பதா?

  • தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்.

  • துணை போனாலும் பிணை போகாதே.

  • துள்ளுகிற மாடு பொதி சுமக்காது.

  • தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி.

  • தெய்வம் வரங் கொடுத்தாலும் பூசாரி விடாதது போல்.

  • தேரோட போச்சு திருநாளு , தாயோட போச்சு பிறந்தகம்.

  • தேளுக்கு மணியம் கொடுத்தால் நிமிஷத்துக்கு நிமிஷம் கொட்டும்.

     தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலிருக்க மாட்டான்.

  • தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.

  • தோல்வியே வெற்றியின் முதல் படி.

  • நக்குற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன?

  • நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்.

  • நண்டு கொழுத்தால் வளையில் தங்காது.

  • நயத்திலாகிறது பயத்திலாகாது.

    நரிக்கு நாட்டாமை கொடுத்தா கிடைக்கு இரண்டாடு கேக்குமாம்.


  • நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை.

  • நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல மனிதனுக்கு ஒரு வார்த்தை.

  • நல்லவனைப் போலிருப்பான் நடுச் சாமத் துரோகி.

  • நாம் ஒன்று நினைக்க தெய்வமொன்று நினைக்கிறது.

  • நாய் வாலை நிமிர்த்த முடியாது.

  • நாய் வேடம் போட்டால் குரைத்துத்தான் தீர வேண்டும்.

  • நாற்கலம் கூழுக்கு நானே அதிகாரி.

    நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள்.

  • நிலவுக்கு அஞ்சிப் பரதேசம் போவது போல்.

  • நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.

  • நிழலின் அருமை வெயிலிலே.

  • நிறை குடம் நீர் தளும்பாது.

  • நீருள்ள மட்டும் மீன் துள்ளும்.

  • நுணலும் தன் வாயால் கெடும்.

  • நெருப்பில்லாமல் புகையாது.

  • நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

  • நோயிருக்கும் இடத்தில் தான் வைத்தியனுக்கு வேலை.

  • பசி வந்தால் பத்தும் பறந்திடும்.

  • பசி வந்திடப் பத்தும் பறந்து போம்.

  • பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்

  • படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில்.

  • படிக்கிறது ராமாயணம்  இடிக்கிறது பெருமாள்  கோயில்.

  • படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில்.

  • பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.

  • பணம் பத்தும் செய்யும்.

  • பணமில்லாதவன் பிணம்.

  • பதறாத காரியம் சிதறாது.

  • பதறிய காரியம் சிதறும்.

  • பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.

  • பருவத்தே பயிர் செய்.

  • பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்ட மாட்டான்.

  • பல துளி பெரு வெள்ளம்.

  • பல்லக்கு ஏற யோகம் உண்டு உன்னி ஏறச் சீவன் இல்லை.

  • பல்லுப் போனால் சொல்லுப் பேச்சு.

  • பழகப் பழகப் பாலும் புளிக்கும்.

  • பழகப் பழகப் பாலும் புளிக்கும்.

  • பழம் பழுத்தால்  கொம்பிலே தங்காது.

  • பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம்.

  • பழுத்த ஒலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம்.

  • பழுத்த பழம் கொம்பிலே நிற்குமா?

  • பள்ளத்திலே இருந்தா பொண்டாட்டி , மேட்டிலே இருந்தா அக்கா !

  • பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது.

  • பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.

  • பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?

  • பன்றி பல குட்டி சிங்கம் ஒரு குட்டி.

  • பன்றிக்குப் பின் போகிற கன்றும் கெடும்.

  • பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை.

  • பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ?

  • பனை மரத்தடியில் பால் குடித்தது போல.

  • பாம்பாட்டிக்குப் பாம்பாலே சாவு , கள்ளனுக்குக் களவிலே சாவு .

  • பாம்பின கால் பாம்பறியும்.

  • பாம்புக்குப் பால் வார்த்தாலும் நஞ்சைத்தான் கக்கும்.

  • பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.

  • பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி.

  • பால் சட்டிக்கு பூனை காவல் வைக்கிறதுபோல்.  

  • பாலுக்குக் காவல் பூனைக்கும் தோழன்.

  • பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்.

  • பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்.

  • பானை பிடித்தவள் பாக்கியசாலி.

  • பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதையும் பறித்ததாம் அனுமார்.

  • பிச்சைக்காரனுக்குப் பயப்பட்டு அடுப்பு மூட்டாமல் விடுகிறதா?

    பிள்ளை பெறப் பெறப் ஆசை , பணம் சேரச் சேர ஆசை .

  • பிள்ளை பெறுமுன் பெயர் வைக்காதே.

  • பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்.

  • புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி.

  • புத்திமான் பலவான்.

  • புத்திமானே பலவான்.

  • புதுமைக்கு வண்ணான் கரைகட்டி வெழுப்பான்.

  • புயலுக்குப் பின்னே அமைதி.

  • புலி பசித்தாலும் புல்லை தின்னாது.

  • புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.

  • புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா?

  • பூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது.

  • பூசணிக்காய் போவது தெரியாது, கடுகுக்குக் காதை அறுத்துக் கொள்வான்.

  • பூமியைப்போலப் பொறுமை வேண்டும்.

  • பூவிற்றகாசு மணக்குமா?

  • பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்.

  • பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.

  • பெண் என்றால் பேயும் இரங்கும்.

  • பெண் வளர்த்தி பீர்க்கங் கொடி.

  • பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.

  • பெண்ணென்று பிறந்த போது புருன் பிறந்திருப்பான்.

  • பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் வரும்.

  • பெருமையும் சிறுமையும் வாயால் வரும்.

  • பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு.

  • பேசப் பேச மாசு அறும்.

  • பேசாதிருந்தால் பிழையொன்றுமில்லை.

  • பேராசை பெரு நஷ்டம்.

  • பொங்கும் காலம் புளி , மங்குங் காலம் மாங்காய்.

  • பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.

  • பொய் சொன்ன வாய்க்குப் போசனங் கிடையாது.

  • பொற்கலம் ஒலிக்காது, வெண்கலம் ஒலிக்கும்.

  • பொறி வென்றவனே அறிவின் குருவாம்.

  • பொறுத்தார் பூமியாள்வார் பொங்குவார் காடாள்வார்.

  • பொறுமை கடலினும் பெரிது.

  • பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.

  • போகாத ஊருக்கு வழி எது?

  • போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.

  • போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கி போட்டுக் கட்டுமா?

  • போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.

  • மடியில் கனமிருந்தால் வழியில் பயம்.

  • மடியிலே கனமிருந்தால் வழியிலே பயம்.

  • மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?

  • மண்டையுள்ள வரை சளி போகாது.

  • மத்தளத்திற்கு இரு புறமும் இடி.

  • மதில் மேல் பூனை போல .

  • மந்திரிக்கும் உண்டு மதிக்கேடு.

  • மயிரை கட்டி மலையை இழு. வந்தால் மலை போனால் மயிர்.

  • மரம் வைத்தவன் தண்ணீர் வார்ப்பான்.

  • மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

  • மருந்தே யாயினும் விருந்தோடு உண்.

  • மல்லாந்து உமிழ்ந்தால் மார்மேல் விழும்.

  • மலிந்த சரக்கு கடைத் தெருவுக்கு வரும்.

  • மனம் உண்டானால் இடம் உண்டு.

  • மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை.

  • மனம் போல வாழ்வு.

  • மனமிருந்தால் மார்க்கமுண்டு


  • மனமுரண்டிற்கு மருந்தில்லை.

  • மன்னன் எப்படியோ  மன்னுயிர் அப்படி.

  • மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம்.

  • மாடம் இடிந்தால் கூடம்.

  • மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா?

  • மாடு கெட்டால் தேடலாம் மனிதர் கெட்டால் தேடலாமா?

  • மாடு மேய்க்காமற் கெட்டது பயிர் பார்க்காமற் கெட்டது.

  • மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும்.

  • மாமியார் உடைச்சா மண் குடம், மருமக உடைச்சா பொன் குடம்.

    மாமியார் உடைத்தால் மண் கலம் மருமகள் உடைத்தால் பொன் கலம்.

  • மாமியார் மெச்சின மருமகளில்லை, மருமகள் மெச்சின மாமியாரில்லை.

  • மாமியாரும் ஒரு வீட்டு மாட்டுப் பெண்தான்.

  • மாரடித்த கூலி மடி மேலே.

  • மாரி யல்லது காரியம் இல்லை.

  • மாவுக்குத் தக்க பணியாரம்.

  • மாற்றானுக்கு இடங் கொடேல்.

  • மானம் பெரிதோ? உயிர் பெரிதோ?

  • மானைக் காட்டி மானைப் பிடிப்பார்.

  • மிதித்தாரை கடியாத பாம்பு உண்டோ?

  • மின்னுவதெல்லாம் பொன்னல்ல.

  • மீ தூண் விரும்பேல்.

  • முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு.

  • முட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டை இடிப்பார்களா?

    முட்டையிடுகிற கோழிக்கு வருத்தம் தெரியும்.

  • முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் படலாமா?

  • முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல.

  • முடி சான்ற மன்னரும் முடிவில் பிடி சாம்பலாவர்.

  • முதல் கோணல் முற்றுங் கோணல்.

  • முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா.

  • முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை.

  • முருங்கை பருத்தால் தூணாகுமா?

  • முள்ளுமேல் சீலைபோட்டால் மெள்ள மெள்ள வாங்கவேண்டும்.

  • முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்.

  • முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

  • முற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது?

  • முன் ஏர் சென்ற வழியே, பின் ஏர் செல்லும்.

  • முன் ஏர் போன வழிப் பின் ஏர்.

  • முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா?

  • முன்கை நீண்டால் முழங்கை நீளும்.

  • மூத்தோர் சொல் வார்த்தை அமுதம்.

  • மெய்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி
  • வாழ்ந்தவனுமில்லை.

  • மெல்லப்பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும்.

  • மெளனம் மலையைச் சாதிக்கும்.

  • மைத்துனன் உதவி மலைபோல.

  • மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடாதே.

  • மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்.

  • மொழி தப்பினவன் வழி தப்பினவன்.

  • மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்.

  • யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.

  • யானை படுத்தாலும் குதிரை மட்டம்.

  • யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே.
     
  • யானைக்கும் அடி சறுக்கும்.

  • யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்.

  • வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.

  • வடக்குப் பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு நல்லது.

  • வட்டி ஆசை முதலுக்கு கேடு.

  • வணங்கின முள் பிழைக்கும்.

  • வரவு எட்டணா செலவு பத்தணா.

  • வரவுக்குத் தக்கபடி செலவை வரையறு.

  • வருந்தினால் வாராதது இல்லை.

  • வருமுன் காப்பதறிவு.

  • வல்​லான் வகுத்​ததே வாய்க்​கால்.

  • வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.

  • வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.

  • வழுக்கி விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை.

  • வளவனாயினும் அளவறிந் தளித்துண்.

  • வாங்கிறதைப் போலிருக்க வேண்டும் கொடுக்கிறதும்.

  • வாய் கருப்பட்டி கை கருணைக்கிழங்கு.

    வாய் சர்க்கரை கை கருணைக் கிழங்கு.

  • வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ.

  • வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.

  • வாழ்வும் தாழ்வும் சில காலம்.

  • வாழு, வாழ விடு.

  • விடிய விடிய ராமாயணம் விடிந்த பிறகு சீதைக்கு ராமன் சித்தப்பன்.

  • விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.

  • விதி எப்படியோ மதி அப்படி.

  • விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா?

  • விரலுக்குத் தக்கதே வீக்கம்.

  • விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள்.

  • விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?

  • விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?

  • வில்வப்பழம் தின்பார் பித்தம் போக பனம் பழம் தின்பார் பசி போக.

  • விலை மோரில் வெண்ணெய் எடுப்பவன்.

  • விழுந்தவன் சிரித்தான் வெட்கத்திற்கஞ்சி.

  • விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா?

  • விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது.

  • விளையாட்டு வினையாயிற்று.

  • விளையும் பயிர் முளையிலே தெரியும்.

  • வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான்.

  • வீட்டில் எலி வெளியில் புலி.

  • வெட்டு ஒன்று துண்டிரண்டு.

  • வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.

  • வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.

  • வெள்ளம் வருமுன் அணை போடு.


  • வெளுத்ததெல்லாம் பாலல்ல.

  • வெளுத்ததெல்லாம் பாலாகுமா, கறுத்ததெல்லாம் தண்ணீராகுமா?

  • வெறுங்கை முழம் போடுமா?

  • வெறும் வாய் மெல்லுகிற அம்மையாருக்கு அவல் அகப்பட்டது போல .

  • வேண்டாப் பொண்டாட்டி கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம்.
     
  • வேணும்னா சக்க வேரிலேயும் காய்க்கும்.

    வேலிக்கு ஓணான் சாட்சி.

  • வேலியே பயிரை மேய்ந்தால் விளைவு என்ன?

  • வேலியே பயிரை மேய்ந்தால், விளைவது எப்படி?

  • ஜென்ம புத்தி செருப்பாலடித்தாலும் போகாது.