google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

Tuesday, June 22, 2010

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

இனிதாவ தெங்குங் காணோம்

பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்

இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு

நாமமது தமிழரெனக் கொண்டிங்கு

வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்

பரவும் வகை செய்தல் வேண்டும.

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,

வாள்ளுவர்போல், இளங்கோவைப் போல்

பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை

உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை

ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்

வாழ்கின்றோம் , ஒருசொற் கேளீர்

சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்

தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்.



பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்

இறவாத புகழுடைய புதுநூல்கள்

தமிழ்மொழியில் இயற்றல்வேண்டும்

மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்

சொல்லுவதிலோர் மகிமை யில்லை

திறமான புலமையெனில் வெளிநாட்டோர்

அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்.



- மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

No comments: