google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: March 2010

Saturday, March 27, 2010

முருக பக்திப் பாடல்கள்

முருகன் துணை

கந்தன் திருநீறணிந்தால்


கந்தன் திருநீறணிந்தால்
கண்டபிணி ஓடிவிடும்
குந்தகங்கள் மாறி இன்பம்
குடும்பத்தை நாடி வரும்
(
கந்தன்)
சுந்தரவேல் அபிஷேக
சுத்தத் திருநீறணிந்தால்
வந்தமர்ந்த மூத்தவளும்
வழிபார்த்துப் போய்விடுவாள்

அந்த நேரம் பார்த்திருந்து
அன்னைசெல்வம் ஓடிவந்து
சிந்தையைக் குளிரவைத்து
சொந்தம் கொண்டாடிடுவாள்
(
கந்தன்)
மணம் மிகுந்த சாம்பலிலே
மகிமை இருக்குதடா
மனமுடன் அணிவோர்க்கு
மகிழ்ச்சியைப் பெருக்குதடா

தினம்தினம் நெற்றியிலே
திருநீறு அணிந்திடடா
தீர்ந்திடும் துன்பம் எல்லாம்
தெய்வம் துணை தாருமடா
(
கந்தன்)
_____________________________________________________________

உள்ளம் உருகுதய்யா

உள்ளம் உருகுதய்யா முருகா
உன்னடி காண்கையிலே
அள்ளி அணைதிடவே
எனக்குள் ஆசை பெருகுதய்யா முருகா
(
உள்ளம்)

பாடிப் பரவசமாய் உனையே
பார்த்திடத் தோணுதய்யா
ஆடும் மயிலேறி முருகா
ஓடி வருவாயப்பா
(
உள்ளம்)
பாசம் அகன்றதய்யா
என் நெஞ்சில் நேசம் வளர்ந்ததய்யா
ஈசன் திருமகனே
எந்தன் ஈனம் மறைந்ததய்யா
(
உள்ளம்)
ஆறு திருமுகமும்
உன்னருளை வாரி வழங்குதய்யா
வீரமிகு தோளும்
கடம்பும் வெற்றி முழக்குதப்பா
(
உள்ளம்)
கண்கண்ட தெய்வமய்யா
நீயிந்தக் கலியுக வரதனய்யா
பாவியென்றிகழாமல்
எனக்குன் பதமலர் தருவாயப்பா
(
உள்ளம்)
______________________________


கற்பனை என்றாலும்


கற்பனை என்றாலும்
கற்சிலை என்றாலும்
கந்தனே உனை மறவேன் - நீ
(
கற்பனை)

அற்புதமாகிய அருட்பெரும் சுடரே
அருமறை தேடிடும் கருணையக் கடலே - நீ
(
கற்பனை)

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே
(
கற்பனை)
____________________________

அழகென்ற சொல்லுக்கு

முருகா... முருகா...

அழகென்ற சொல்லுக்கு முருகா - உந்தன்
அருளன்றி உலகிலே பொருளேது முருகா (அழகென்ற)

சுடராக வந்த வேல் முருகா - கொடுஞ்
சூரரைப் போரிலே வென்ற வேல் முருகா
கனிக்காக மனம் நொந்த முருகா - முக்
கனியான தமிழ் தந்த செல்வமே முருகா (அழகென்ற)

ஆண்டியாய் நின்ற வேல் முருகா - உன்னை
அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா
பழம் நீ அப்பனே முருகா - ஞானப்
பழம் உன்னை அல்லாது பழம் ஏது முருகா (அழகென்ற)

குன்றாறும் குடி கொண்ட முருகா - பக்தர்
குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா
சக்தி உமை பாலனே முருகா - மனித
சக்திக்கே எட்டாத தத்துவமே முருகா (அழகென்ற)

பிரணவப் பொருள் கண்ட திரு முருகா - பரம்
பொருளுக்கு குருவான தேசிகா முருகா
ஹரஹரா ஷண்முகா முருகா - என்று
பாடுவோர் எண்ணத்தில் ஆடுவாய் முருகா (அழகென்ற)

அன்பிற்கு எல்லையோ முருகா - உந்தன்
அருளுக்கு எல்லை தான் இல்லையே முருகா
கண்கண்ட தெய்வமே முருகா - எந்தன்
கலியுக வரதனே அருள் தாரும் முருகா (அழகென்ற)

__________________________________________

ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் னணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்கசீ ரடிய ரெல்லாம்.

________________________________________________

Monday, March 22, 2010

வீட்டுக் காய்கறித் தோட்டம்

  • காய்கறிகள் நமது அன்றாட வாழ்விற்கு மிகவும் முக்கியமான வையாகும்.
  • இவை உணவின் ஊட்டச்சத்தை அதிகரிப்பதோடு, உணவை ருசியாக்குகின்றன.
  • ஊட்டச்சத்து வல்லுனர்களின் பரிந்துரைப்படி, ஒரு வயது வந்த நபர், சீரான திட்ட உணவிற்கு ஒரு நாளைக்கு 85 கிராம் பழங்களையும் 300 கிராம் காய்கறிகளையும் உண்ண வேண்டும்.
  • நாம் நமது அன்றாட வாழ்விற்கு தேவையான காய்கறிகளை வீட்டுக் காய்கறி தோட்டத்தில், நம்மிடம் உள்ள சுத்தமான தண்ணீர், சமயலறை மற்றும் குளியலறை கழிவு நீரை பயன்படுத்தி உற்பத்தி செய்யலாம்.
  • மிகக் குறைவான இடத்தில் சாகுபடி செய்யப்படுவதால், மிக எளிதான முறையில் நோய் மற்றும் பூச்சி கட்டுப்பாட்டை மேற்கொள்ள முடிகிறது.
  • மேலும் பூச்சிகொல்லி மருந்துகள் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.
  • நோய் மற்றும் பூச்சி தாக்கிய பகுதிகளை செடிகளில் இருந்து அகற்றினால் போதுமானதாகும்.
  • இதனால் காய்கறிகளில் நச்சு இரசாயனங்கள் படிவதை தவிர்க்க முடிகிறது.


தோட்டத்திற்கான இடம் தேர்வு செய்தல்:

  • வீட்டின் பின்புறத்தில் அல்லது முன்புறத்தில் இருக்கும் காலி இடத்தை தேர்வு செய்யலாம்.
  • காலியாக இருக்கும் இடத்தைப் பொறுத்தும், எத்தனை நபருக்கு காய்கறி தேவைப்படும் என்பதை பொறுத்தும் தோட்டத்தின் அளவை நிர்ணயம் செய்ய வேண்டும்.
  • தோட்டத்தை எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம். ஆனால் முடிந்தவரை சதுரவடிவத்தைவிட செவ்வக வடிவ வீட்டுக்காய்கறி தோட்டத்தை தேர்வு செய்யலாம்.
  • ஊடுபயிர் சாகுபடி மற்றும் தொடர் சாகுபடி முறையை மேற்கொள்ள வேண்டும்.


நிலம் தயார் செய்தல்:

  • நிலத்தை 30-40 செமீ ஆழத்திற்கு மண்வெட்டி கொண்டு கிளறிவிட வேண்டும்.
  • கற்கள், புதர்கள், களைகள் ஆகியவற்றை அகற்ற வேண்டும்.
  • 100 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு எருவை இட்டு நன்கு கலக்கி விட வேண்டும்.
  • தேவைக்கேற்ப 45 செமீ - 60 செமீ என்ற இடைவெளியில் பார்சால் அமைக்க வேண்டும்.
  • தேவைப்பட்டால் படுக்கை முறையிலும் சாகுபடி செய்யலாம்.


விதைத்தல் மற்றும் நடவு செய்தல்:


  • நேரடி விதைப்பு பயிர்களான வெண்டை, கொத்தவரை மற்றும் தட்டைப்பயறு போன்றவற்றை பாரின் ஒரு புறத்தில் 30 செமீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
  • முழு செடியாக பிடுங்கப்படும் அல்லது அறுவடை செய்யப்படும் தண்டுக்கீரை, சிறுகீரை ஆகியவற்றை, 1 பகுதி விதை 20 பகுதி மணல் என்ற விகிதத்தில் கலந்து கை விதைப்பு செய்யவேண்டும்.
  • சின்ன வெங்காயம், புதினா, கொத்தமல்லி போன்றவற்றை வரப்பின் ஓரத்தில் நட வேண்டும்.
  • நாற்று நடவு செய்யும் பயிர்களான தக்காளி, கத்தரி, மிளகாய் போன்றவற்றை நாற்றங்கால் படுக்கைகளில் அல்லது தொட்டிகளில் ஒரு மாதத்திற்கு முன்பே விதைக்க வேண்டும்.
  • விதைப்பு முடிந்து மண்ணை மூடியவுடன், எறும்பு வருவதை தடுக்க 250 கிராம் வேப்பம்புண்ணாக்கை தூவவேண்டும்.
  • விதைத்து 30 நாட்கள் கழித்து தக்காளியையும், 40-45 நாட்கள் கழித்து கத்தரி, மிளகாய், சிறு வெங்காயம் ஆகியவற்றையும் நாற்றங்களில் இருந்து எடுத்து நடவு செய்ய வேண்டும்.
  • தக்காளி, கத்தரி, மிளகாய் ஆகியவற்றிற்கு 30-45 செமீ என்ற இடைவெளியில் பாரின் ஒரு பக்கத்திலும், சின்ன வெங்காயத்திற்கு 10 செமீ இடைவெளியில் பாரின் இரு பக்கமும் நட வேண்டும்.
  • நடவு செய்தவுடன் முதல் தண்ணீரும் நட்ட மூன்றாம் நாள் மறுதண்ணீரும் பாய்ச்ச வேண்டும்.
  • நாற்றுகளுக்கு இளம் பருவங்களில் இரு நாட்களுக்கு ஒரு முறையும், பிற்பருவங்களில் நான்கு நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்ச வேண்டும்.
  • ஒரு வருடத்திற்கு, வீட்டுச்செலவுக்கு தேவைப்படும் காய்கறிகளை தொடர்ச்சியாக உற்பத்தி செய்வதே வீட்டு காய்கறி தோட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.
  • சில முக்கிய வழிமுறைகளை கையாண்டு இந்த நோக்கத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம்.
  • பல பருவ தாவரங்களை மற்ற பயிர்களில் நிழல் படியாதவாறும், ஊட்டச்சத்திற்கு போட்டி ஏற்படாதவாறும் தோட்டத்தின் மூலையில் நடவேண்டும்.
  • தோட்டத்தின் நடுவில் உள்ள நடைபாதை மற்றும் ஏனைய நடைபாதையின் அருகிலும் குறுகிய கால பயிர்களான கொத்தமல்லி, புதினா, பொன்னாங்கன்னி, பாலக் போன்றவற்றை நட வேண்டும்.
  • ஊடுபயிராக தண்டுகீரை, சிறுகீரை பயிர் செய்யவும்.


பலவருட பயிர்கள்:

  • முருங்கை, வாழை, பப்பாளி, மரவள்ளிக் கிழங்கு, கறிவேப்பிலை, அகத்தி.

இந்திய சூழ்நிலைக்கு ஏற்ற ஒரு மாதிரி வீட்டுக் காய்கறி தோட்டத்திற்கான பயிரிடும் திட்டமுறை (மலைப் பகுதி தவிர):


  • தக்காளி மற்றும் வெங்காயம் -- ஜுன் - செப்டம்பர்
  • முள்ளங்கி -- அக்டோபர் - நவம்பர்
  • பீன்ஸ் -- டிசம்பர் - பிப்ரவரி
  • வெண்டைக்காய் -- மார்ச் - மே
  • கத்தரி -- ஜுன் - செப்டம்பர்
  • பீன்ஸ் -- அக்டோபர் - நவம்பர்
  • தக்காளி -- ஜுன் - செப்டம்பர்
  • தண்டுகீரை, சிறுகீரை -- மே
  • மிளகாய் மற்றும் முள்ளங்கி -- ஜுன் - செப்டம்பர்
  • தட்டப்பயறு / காராமணி -- டிசம்பர் - பிப்ரவரி
  • பெல்லாரி வெங்காயம் -- மார்ச் - மே
  • வெண்டைக்காய் மற்றும் முள்ளங்கி -- ஜுன் - ஆகஸ்டு
  • முட்டைக்கோஸ் -- செப்டம்பர் - டிசம்பர்
  • கொத்தவரை -- ஜனவரி - மார்ச்
  • பெரிய வெங்காயம் -- ஜுன் - ஆகஸ்டு
  • பீட்ருட் -- செப்டம்பர் - நவம்பர்
  • தக்காளி -- டிசம்பர் - மார்ச்
  • வெங்காயம் -- ஏப்ரல் - மே
  • கொத்தவரை -- ஜுன் - செப்டம்பர்
  • கத்தரி மற்றும் பீட்ருட் -- அக்டோபர் - ஜனவரி
  • பெரிய வெங்காயம் -- ஜுலை - ஆகஸ்டு
  • கேரட் -- செப்டம்பர் - டிசம்பர்
  • பூசணி -- ஜனவரி - மார்ச்
  • மொச்சை, அவரை -- ஜுன் - ஆகஸ்டு
  • வெங்காயம் -- ஜனவரி - ஆகஸ்டு
  • வெண்டைக்காய் -- செப்டம்பர் - டிசம்பர்
  • கொத்தமல்லி -- ஏப்ரல் - மே

காய்கறி தோட்டத்தின் பயன்கள்:

  • முதலில் தங்கள் குடும்பத்திற்கு தேவையான காய்கறிகளை பூர்த்தி செய்து கொண்டு, பின்னர் அளவுக்கு அதிகமாக உள்ளவற்றை விற்கவும் அல்லது பண்டம் மாற்றி கொள்ளவும் செய்யலாம்.
  • சில சமயங்களில், வருமானம் ஈட்டுவதே காய்கறி தோட்டத்தின் முதன்மையான நோக்கம் ஆகிவிடுகிறது.
  • எந்த சமயத்திலும் ஒரு நல்ல ஊட்டச்சத்தின் அவசியத்தை மனதில் கொள்ள வேண்டும். ஏனெனில் ஊட்டச்சத்தும், வருவாய் ஈட்டுவதும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையனவாகும்.


வீட்டு காய்கறி தோட்டத்தின் பொருளாதார ஆதாயங்களும் பயன்களும்:

  • காய்கறி மற்றும் வருமானம் ஆகிய இரண்டு ஆதாயங்களும் வீட்டு காய்கறி தோட்டத்தில் கிடைக்கின்றன.
  • வீட்டில் பராமரிக்கப்படும் கால்நடைக்கு தேவையான தீவனமும் மற்றும் ஏனைய வீட்டு உபயோகத்திற்கு தேவைப்படும் விறகு போன்ற மூலப்பொருட்களும் கிடைக்கின்றன.
  • வீட்டுக்காய்கறி தோட்டத்துடன் கூடவே கால்நடை வளர்ப்பு, பெண்கள் சுயவருமானம் பெறுவதற்கு மூலாதாரமாக அமைகின்றது.

Wednesday, March 17, 2010

நவக்கிரஹ ஸ்லோகம்

சூரிய காயத்ரி

அஸ்வத் வஜாய வித்மஹே! பத்மஹஸ்தாய தீமஹி!
தந்நோ சூர்ய ப்ரசோதயாத்!

சந்திர காயத்ரி

நிசாகராய வித்மஹே! கலாநாதாய தீமஹி!
தந்நோ ஸ்சந்த்ர ப்ரசோதயாத்!

அங்காரக காய்த்ரீ

அங்காரகாய வித்மஹே! பூமி பாலாய தீமஹி!1
தந்நோ குஜ ப்ரசோதயாத்!

புத காயத்ரீ

ஆத்ரேயாய வித்மஹே! இந்து புத்ராய தீமஹி!!
தந்நோ புத ப்ரசோதயாத்!

குரு காயத்ரி

ஆங்கீரஸாய வித்மஹே! சராசார்யாய தீமஹி!!
தந்நோ குரு ப்ரசோதயாத்!

சுக்கிர காயத்ரி

ராஜதாபாய வித்மஹே! ப்ருகு கதாய தீமஹி!!
தந்நோ சுக்ர ப்ரசோதயாத்!

சனி காயத்ரி

பங்கு பாதாய வித்மஹே! சூர்ய புத்ராயா தீமஹி!!
தந்நோமந்த ப்ரசோதயாத்!

ராகு காயத்ரி

ஸூக தந்தாய வித்மஹே! உக்ரரூபாய தீமஹி!!
தந்நோ ராகு ப்ரசோதயாத்!

கேது காயத்ரி

சிதர வர்ணாய வித்மஹே! ஸர்பரூபாய தீமஹி!!
தந்நோ கேது ப்ரசோதயாத்!

Sunday, March 14, 2010

Several Names of Lord Muruga

முருகனின் பல பெயர்கள்

அமரேசன்

அன்பழகன்

அழகப்பன்

ஆறுமுகம்

உமைபாலன்

பாலமுருகன்

பாலசுப்ரமணியம்

சந்திரகாந்தன்

சந்திரமுகன்

தனபாலன்

தீனரீசன்

தீஷிதன்

கிரிராஜன்

கிரிசலன்

குகஅமுதன்

குணாதரன்

குருமூர்த்தி

ஜெயபாலன்

ஜெயகுமார்

கந்தசாமி

கார்த்திக்

கார்த்திகேயன்

கருணாகரன்

கருணாலயன்

கிருபாகரன்

குலிசாயுதன்

குமரன்

குமரேசன்

லோகநாதன்

மனோதீதன்

மயில்பிரீதன்

மயில்வீரா

மயூரகந்தன்

மயூரவாஹனன்

முருகவேல்

நாதரூபன்

நிமலன்

படையப்பன்

பழனிவேல்

பூபாலன்

பிரபாகரன்

ராஜசுப்ரமணியம்

ரத்னதீபன்

சக்திபாலன்

சக்திதரன்

சங்கர்குமார்

சரவணபவன்

சரவணன்

சத்குணசீலன்

சேனாபதி

செந்தில்குமார்

செந்தில்வேல்

சண்முகலிங்கம்

சண்முகம்

சிவகுமார்

சிஷிவாகனன்

செளந்தரீகன்

சுப்ரமண்யன்

சுதாகரன்

சுகதீபன்

சுகிர்தன்

சுப்பய்யா

சுசிகரன்

சுவாமிநாதன்

தண்டபாணி

தணிகைவேலன்

தண்ணீர்மலையன்

தயாகரன்

உத்தமசீலன்

உதயகுமாரன்

வைரவேல்

வேல்முருகன்

விசாகனன்

அழகன்

அமுதன்

ஆறுமுகவேலன்

பவன்

பவன்கந்தன்

ஞானவேல்

குகன்

குகானந்தன்

குருபரன்

குருநாதன்

குருசாமி

இந்திரமருகன்

ஸ்கந்தகுரு

கந்தவேல்

கதிர்காமன்

கதிர்வேல்

குமரகுரு

குஞ்சரிமணாளன்

மாலவன்மருகன்

மருதமலை

முத்தப்பன்

முத்துக்குமரன்

முத்துவேல்

பழனிநாதன்

பழனிச்சாமி

பரமகுரு

பரமபரன்

பேரழகன்

ராஜவேல்

சைலொளிபவன்

செல்வவேல்

செங்கதிர்செல்வன்

செவ்வேல்

சிவகார்த்திக்

சித்தன்

சூரவேல்

தமிழ்செல்வன்

தமிழ்வேல்

தங்கவேல்

தேவசேனாபதி

திருமுகம்

திரிபுரபவன்

திருச்செந்தில்

வெற்றிவேல்

வேலய்யா
Aranmakan

Arumughan / Arumukhan / Arumugan / Arumugham / Arumugam

Arumin Kadalan

Arumugathamudhu

Azhagan

Bakuleyan

Bala Subramanian / Bala Subramanyam / Bala Subrahmanyam

Chetty

Dandapani

Dandayudhapani

Devasenapati

Teyvayanai Kantan / Deivanai Kandan

Ganapati Izhankilai

Gangai Maindan

Gangai Siruvan

Gangeyan / Kangeyan

Gnana Panditan / Gnana Pandithan

Gauri Nandanan

Guhan

Guru

Kadamban

Kandan

Kartikeyan / Karthikeyan

Katireshan / Kathiresan

Katir Kamattu Ican

Kothandapani

Kozhikkodiyon

Kuzhandai

Kulandai Velayudhan

Kumaran

Muttaian

Muttuk Kumaran

Muttu Kumaraswami

Pazhani Andavar

Pazhani Appan

Pavaki

Sangat Talaivan

Saravanan

Saravana Bhavan

Senaik Kappon

Senapati

Sendan

Senthil Vadivelan

Sevvel

Seyon

Sevarkodiyon

Shanmukhan

Shanmukha Nathan

Shanmukha Sundaram

Shanmukha Vadivelan

Shanmukha Velan

Siddhan / Siththan

Shikivahanar

Silamban / Silampan

Shringaravelan / Singaravelan

Shivakumaran / Sivakumara / Sivakumaran / Shivkumar

Sur Thandinthon

Sur Pakaivan

Subrahmaniyan / Subrahmanyam

Sundara Shanmukhan / Sundhara Saanmugan

Kumarappan

Kumaraswami / Kumaraswamy

Kumaresan

Kundrakkudiyon

Kundrenindhon

Kurinji Vendan

Kuzhagan

Mal Marugan

Malaimakal Makan

Mangai Urdi

Manoharan

Mayilvahanan

Mayonmarugan

Murukan / Murugan

Murugavel

Sundaravadivelan

Suresan

Swami

Swaminathan

Thanikachalam

Tharakar Serron

Thakappanswami

Vadivelan

Vallikkantan / vallikanthan

Vallimanalan

Vanaipaka verindon

Velan

Vel

Vishakan

Yanaikkum Kuzhakan